குண்டடம் அருகே கிராம சபை கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவரிடம் கிராம மக்கள் மனு

குண்டடம் அருகே வெருவேடம்பாளையத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் முக்கிய துறைகளின் அலுவலர்கள் யாரும் பங்கேற்காததால் கிராமசபை கூட்டத்தை ரத்து செய்துவிட்டு வேறு தேதியில் அனைத்து துறை அலுவலரகளையும் அழைத்து கூட்டத்தை நடத்த வேண்டும் என மக்கள் மனு அளித்தனர்.


திருப்பூர்: கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய 19 துறைகளில், 15 துறைகளின் அலுவலர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் மற்ற துறையினரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்து தீர்வு பெற வந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

குண்டடம் அருகே நந்தவனம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வெருவேடம்பாளையத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் தனசெல்வி தலைமை தாங்கினார். இதில் கூடுதல் வட்டார வளர்ச்சி அதிகாரி சரவணன் கலந்து கொண்டு பேசினார்.

கிராமசபை கூட்டத்தில் கால்நடை பராரிப்பு, உள்ளாட்சி, சுகாதாரம் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மட்டும் பங்கேற்று அவர்களின் துறை சார்ந்து பேசினர். கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய 19 துறைகளில் ஏனைய 15 துறைகளின் அலுவலர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் மற்ற துறையினரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்து தீர்வு பெற வந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக பொதுமக்கள் பெரும்பாலான அலுவலர்கள் கலந்து கொள்ளாததால் கிராம சபை கூட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஊராட்சி தலைவரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-கிராமசபை கூட்டத்தில் முக்கிய துறைகளின் அலுவலர்கள் யாரும் பங்கேற்காததால் கிராமசபை கூட்டத்தை ரத்து செய்துவிட்டு வேறு தேதியில் அனைத்து துறை அலுவலரகளையும் அழைத்து கூட்டத்தை நடத்த வேண்டுகிறோம் என குறிப்பிட்டிருந்தனர்.

அந்த மனுவை பஞ்சாயத்து தலைவர் பெற்றுக் கொண்ட நிலையில் அதற்கு பதிலளித்த அதிகாரி இந்த கருத்தை கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அடுத்த முறை அனைத்து துறை அலுவலர்களையும் பங்கேற்க ஏற்பாடு செய்கிறோம் என்றார்.

அதனைக் கேட்ட பொதுமக்கள் கடந்த 3 கிராமசபை கூட்டங்களிலும் இந்த விசயத்தை வலியுறுத்தி வருகிறோம். ஆனால் கூட்டம் முடிந்ததும் அதை மறந்துவிடுகின்றனர். அதனால் இந்த கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதுபற்றி கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். கூட்டத்தை ரத்து செய்ய முடியாது என மீண்டும் அதிகாரி கூறினார்.இதனால் கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

மடத்துக்குளம் ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள கோரி விவசாயிகள் மனு

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள காரத்தொழவு ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு, ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்கள...

கோவையில் 7 துணை மின் நிலையங்களில் நாளை (09.06.2026) மின் தடை

கோவையில் கவுண்டம்பாளையம், மாதம்பட்டி, மருதூர், தேவராயபுரம், பெரியநாயக்கன்பாளையம், பவானி அணை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 7 த...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...

கோவை பீளமேடு அவிநாசி பிரதான சாலையில் போஸ்டர் அகற்றும் பணி - கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் போஸ்டர் அகற்றும் பணி நடைபெற்றது. வார்டு கவுன்சிலர...

கோவையில் அடுத்தடுத்து நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் படுகாயம்

கோவை மாநகரில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் பெண் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். சரவணம்பட்டி, ஆவாரம்பாளையம...

கோவை குனியமுத்தூரில் கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவரிடம் ரூ.47,000, செல்போன், செயின் பறிப்பு

கோவை குனியமுத்தூரில் கல்லூரி மாணவரை நான்கு பேர் மிரட்டி வங்கி கணக்கிலிருந்து ரூ.47,000 பணம் பரிமாற்றம் செய்யச் சொன்னதோடு...