குண்டடம் அருகே கிராம சபை கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவரிடம் கிராம மக்கள் மனு

குண்டடம் அருகே வெருவேடம்பாளையத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் முக்கிய துறைகளின் அலுவலர்கள் யாரும் பங்கேற்காததால் கிராமசபை கூட்டத்தை ரத்து செய்துவிட்டு வேறு தேதியில் அனைத்து துறை அலுவலரகளையும் அழைத்து கூட்டத்தை நடத்த வேண்டும் என மக்கள் மனு அளித்தனர்.


திருப்பூர்: கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய 19 துறைகளில், 15 துறைகளின் அலுவலர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் மற்ற துறையினரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்து தீர்வு பெற வந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

குண்டடம் அருகே நந்தவனம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வெருவேடம்பாளையத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் தனசெல்வி தலைமை தாங்கினார். இதில் கூடுதல் வட்டார வளர்ச்சி அதிகாரி சரவணன் கலந்து கொண்டு பேசினார்.

கிராமசபை கூட்டத்தில் கால்நடை பராரிப்பு, உள்ளாட்சி, சுகாதாரம் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மட்டும் பங்கேற்று அவர்களின் துறை சார்ந்து பேசினர். கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய 19 துறைகளில் ஏனைய 15 துறைகளின் அலுவலர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் மற்ற துறையினரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்து தீர்வு பெற வந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக பொதுமக்கள் பெரும்பாலான அலுவலர்கள் கலந்து கொள்ளாததால் கிராம சபை கூட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஊராட்சி தலைவரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-கிராமசபை கூட்டத்தில் முக்கிய துறைகளின் அலுவலர்கள் யாரும் பங்கேற்காததால் கிராமசபை கூட்டத்தை ரத்து செய்துவிட்டு வேறு தேதியில் அனைத்து துறை அலுவலரகளையும் அழைத்து கூட்டத்தை நடத்த வேண்டுகிறோம் என குறிப்பிட்டிருந்தனர்.

அந்த மனுவை பஞ்சாயத்து தலைவர் பெற்றுக் கொண்ட நிலையில் அதற்கு பதிலளித்த அதிகாரி இந்த கருத்தை கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அடுத்த முறை அனைத்து துறை அலுவலர்களையும் பங்கேற்க ஏற்பாடு செய்கிறோம் என்றார்.

அதனைக் கேட்ட பொதுமக்கள் கடந்த 3 கிராமசபை கூட்டங்களிலும் இந்த விசயத்தை வலியுறுத்தி வருகிறோம். ஆனால் கூட்டம் முடிந்ததும் அதை மறந்துவிடுகின்றனர். அதனால் இந்த கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதுபற்றி கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். கூட்டத்தை ரத்து செய்ய முடியாது என மீண்டும் அதிகாரி கூறினார்.இதனால் கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...