காந்தியடிகள் பிறந்த நாள் - மனக்கடவு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் மனக்கடவு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி கனகராஜ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம சமபை கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் மனகடவு ஊராட்சியில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி கனகராஜ், தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி ஒன்றிய குழுதலைவர் எஸ்.வி செந்தில்குமார், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

இதில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மங்களம் கு.செல்லமுத்து, முன்னாள் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் ராஜதுரை, ஒன்றிய பொருளாளர் மாரிமுத்து, சட்ட ஆலோசகர் கே.சகுந்தலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பொதுமக்களை குறைகளை கேட்டறிந்தனர்.



அப்போது, பொதுமக்கள் கூறிய சாக்கடை குடிநீர், தெரு விளக்கு போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுத்து விரைவில் முடித்து தருவதாக தெரிவித்தனர்.



மேலும் கிராம சபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...