உடுமலை ஓன்றியத்தில் கிராம சபைக்கூட்டம் - ஏராளமான மக்கள் பங்கேற்பு

உடுமலை ஒன்றியங்களுக்கு உடபட்ட பகுதிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் டெங்கு காய்ச்சலை ஓழிப்பது, துய்மை பணிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


திருப்பூர்: காந்தி ஜெயந்தியையொட்டி உடுமலை ஓன்றியத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது.



பெரிய கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் உடுமலை ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்துதல் தொடர்பாகவும், வடகிழக்கு பருவ மழை முன்னேற்றத்திற்கு நடவடிக்கை குறித்தும் பொது சுகாதாரம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.



எனது குப்பை எனது பொறுப்பு என் கிராமத்தை தூய்மையாகவும் சுத்தமாக வைத்திருப்பது எனது கடமை என அனைவரும் தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் பாலசுப்பிரமணியம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



இதே போல போடிபட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் தலைமை வகித்தார் அப்போது ஊராட்சிகள் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் நடைபெற உள்ள பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.



பின்னர் தூய்மை உறுதிமொழி அனைவரும் எடுத்துக் கொண்டனர்.



இதேபோல சின்னவீரன்பட்டி ஊராட்சியில் மன்ற தலைவர் கலாவதி பழனிச்சாமி தலைமையில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...