செம்மிபாளையத்தில் கிராம சபை கூட்டம் - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

பல்லடம் அருகே செம்மிபாளையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பது குறித்தும் கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செம்மிபாளையம் ஊராட்சியில் இன்று காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ், சார்ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், வட்டாட்சியர் ஜெய்சிங் சிவக்குமார், திட்ட இயக்குனர் மற்றும் ஊராட்சி தலைவர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



இந்த கிராம சபை கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பது குறித்தும், தூய்மை பாரத இயக்கத்தை முன்னெடுப்பது குறித்தும், காசநோய் இல்லாத கிராமமாக அறிவிப்பது குறித்தும், ஊராட்சியின் வரவு செலவு ஆவணங்களை சரி பார்ப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.



இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மகளிர் சுய உதவி குழுவினருக்கும்,உழவர் உற்பத்தியாளர் குழுவினருக்கும், கடன் உதவி தொகை வழங்கினார்.



மேலும் முதியவர்களுக்கு கண் கண்ணாடி மற்றும் ஓய்வு பெற்ற அஞ்சல் துறை அதிகாரிகளுக்கு நினைவு பரிசுகளையும் வழங்கினார்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...