செம்மிபாளையத்தில் கிராம சபை கூட்டம் - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

பல்லடம் அருகே செம்மிபாளையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


திருப்பூர்: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பது குறித்தும் கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செம்மிபாளையம் ஊராட்சியில் இன்று காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ், சார்ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், வட்டாட்சியர் ஜெய்சிங் சிவக்குமார், திட்ட இயக்குனர் மற்றும் ஊராட்சி தலைவர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



இந்த கிராம சபை கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பது குறித்தும், தூய்மை பாரத இயக்கத்தை முன்னெடுப்பது குறித்தும், காசநோய் இல்லாத கிராமமாக அறிவிப்பது குறித்தும், ஊராட்சியின் வரவு செலவு ஆவணங்களை சரி பார்ப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.



இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மகளிர் சுய உதவி குழுவினருக்கும்,உழவர் உற்பத்தியாளர் குழுவினருக்கும், கடன் உதவி தொகை வழங்கினார்.



மேலும் முதியவர்களுக்கு கண் கண்ணாடி மற்றும் ஓய்வு பெற்ற அஞ்சல் துறை அதிகாரிகளுக்கு நினைவு பரிசுகளையும் வழங்கினார்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...