ஊதிய உயர்வு, அரசுப் பணியாளராக நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய ஆஷா பணியாளர்கள் ஏஐடியுசி சங்கத்தின் அமைப்புக்கூட்டம் உடுமலைப்பேட்டையில் நடைபெற்றது.
திருப்பூர்: ஆஷா பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவேண்டும் என உடுமலையில் நடைபெற்ற ஏஐடியுசி சங்கத்தின் அமைப்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள ஆஷா பணியாளர்கள் ஏஐடியுசி சங்கத்தின் அமைப்பு கூட்டம் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஏஜடியூசி மாநில பொதுக்குழு உறுப்பினர் செளந்திரராஜன், மாவட்டநிர்வாகிகள் சி.சுப்பிரமணியம், சி.ராஜேந்திரன் மற்றும் திருப்பூர் மாவட்ட ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் நிர்வாகி. சக்கரையப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆஷா பணியாளர்கள் கோரிக்கைகளை முன்வைத்து பேசப்பட்டது.
சம்பளம் உயர்வு, அரசுபணியாளர்களாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து மாநில அமைப்பு நடத்தும் அனைத்து இயக்கத்தில் பங்கெடுத்து கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள ஆஷா பணியாளர்கள் ஏஐடியுசி சங்கத்தின் அமைப்பு கூட்டம் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஏஜடியூசி மாநில பொதுக்குழு உறுப்பினர் செளந்திரராஜன், மாவட்டநிர்வாகிகள் சி.சுப்பிரமணியம், சி.ராஜேந்திரன் மற்றும் திருப்பூர் மாவட்ட ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் நிர்வாகி. சக்கரையப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆஷா பணியாளர்கள் கோரிக்கைகளை முன்வைத்து பேசப்பட்டது.
சம்பளம் உயர்வு, அரசுபணியாளர்களாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து மாநில அமைப்பு நடத்தும் அனைத்து இயக்கத்தில் பங்கெடுத்து கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.