குன்னூரில் தொடங்கிய அத்திப்பழம் சீசன் - பழங்களை சுவைப்பதற்காக கூட்டம் கூட்டமாக குவியும் இருவாச்சி பறவைகள்

குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உள்ள கே.என்.ஆர் பகுதியில் அத்திப்பழம் சீசன் தொடங்கி உள்ளதையொட்டி, அத்திப்பழங்களை சுவைப்பதற்காக அரிய வகை பறவை இனங்களில் ஒன்றாக திகழும் இருவாச்சி பறவைகள் படையெடுத்த வந்த வண்ணம் உள்ளன.


நீலகிரி: அத்திமரங்களில் கூட்டம் கூட்டமாக அமர்ந்துள்ள இருவாச்சி பறவைகளை அவ்வழியாக செல்லும் சுற்றுலாப்பயணிகள், போட்டோ எடுத்து ரசித்து சென்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் அடிக்கடி பெய்து வரும் மழை காரணமாக, அங்கு தற்போது மிதமான காலநிலை நிலவுகிறது. எனவே அங்கு உள்ள மலைப்பாதையில் வனப்பகுதியை ஒட்டி உள்ள மரங்களில் பலாப்பழங்கள் அதிகளவில் காய்த்து தொங்குகின்றன.

குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உள்ள கே.என்.ஆர் பகுதியில் அத்திப்பழம் சீசன் தொடங்கி உள்ளது. இதனால் அங்கு உள்ள மரங்களில் அத்திப்பழங்கள் அதிகம் காய்த்து உள்ளன. எனவே அரிய வகை பறவை இனங்களில் ஒன்றாக திகழும் இருவாச்சி பறவைகள் அத்திப்பழம் சுவைப்பதற்காக படையெடுத்து வந்த வண்ணம் உள்ளன.

அவை தனது நீண்ட அழகால் அத்திப்பழங்களை கொத்தி தின்று வருகின்றன. குன்னூர் பகுதியில் இருவாச்சி பறவைகள் முகாமிட்டு உள்ளதால் அந்த வழியாக செல்லும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அவற்றை போட்டோ எடுத்தும் ரசித்தும் செல்கின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...