மேட்டுப்பாளையம் அருகே தென் திருப்பதி கோயிலில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

சிறப்பு அலங்காரங்களுடன் மலையப்பசுவாமி ஸ்ரீதேவி-பூதேவி தாயாருடன் எழுந்தருளிய தேரை, கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.


கோவை: மேட்டுபாளையம் அருகே உள்ள தென் திருப்பதி கோவில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது

மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில் தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆனந்த நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த வகையில் நடப்பாண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றைய தினம் இரவு மலையப்ப சுவாமிகள் பெரிய சேஷ வாகனத்திலும், அடுத்த நாள் சின்ன சேஷ வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்ந்து 20-ந்தேதி சிம்ம வாகனத்திலும், 21-ந்தேதி கல்ப விருட்ச வாகனத்திலும் திருவீதி உலா வந்தனர். தொடர்ந்து ஸ்ரீவில்லி புத்தூர் ஸ்ரீ ஆண்டாள் மாலை சமர்ப்பித்தல் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் மாலையில் கருடசேவை நடந்தது. அப்போது ஸ்ரீமலையப்ப சுவாமி மோகினி திருக்கோலத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி, நான்கு மாடங்களின் வழியாக வலம் வந்து நிலையை வந்தடைந்தார். கருடவீதியுலா நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலையில் சிறப்பு அலங்காரங்களுடன் மலையப்பசுவாமி ஸ்ரீதேவி-பூதேவி தாயாருடன் திருத்தேரில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

அப்போது மேளதாளங்கள் முழங்க, கோவிந்தா,கோவிந்தா என்று பக்தர்கள் கோஷம் எழுப்பினர். நான்கு மாட வீதிகளின் வழியாக வலம் வந்த தேரோட்டம், நிறைவாக நிலையை வந்தடைந்து.

அன்னூர் கே.கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர் மற்றும் கே.ஜி நிறுவன ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் திரளாக வந்திருந்து மலையப்ப சுவாமியின் அருளாசி பெற்றனர்.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...