கோரிக்கை வைத்த மலைவாழ் மக்கள் - உடனடி நடவடிக்கை எடுத்த கோவை ஆட்சியர்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்ற ஆட்சியர் கிராந்திகுமார், உயிருக்கு போராடும் மலைவாழ் மக்களை சேர்ந்தவருக்கு உடனடி மருத்துவ காப்பீடு திட்டம் அட்டையை வழங்கினார்.


கோவை: மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் ஆனைகட்டி வடக்கலூர் மலைவாழ் பகுதியை சேர்ந்த மல்லன் என்பவர் அவரது மகள் மற்றும் மருமகன் பாலக்காடு சாலையில் ஈச்சர் வாகனத்தில் வாழைக்காய் லோடு ஏற்றி சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத தருணத்தில் நடைபெற்ற விபத்தில் மருமகன் சம்பவ இடத்தில் உயிரிழந்ததாகவும் அவரது மகள் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாகவும் மனு அளித்தார்.

தற்பொழுது கேரள மாநிலம் கோட்டையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில் மகளுக்கு உடனடியாக மேல் சிகிச்சை அளிக்க முதல்வரின் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்க வேண்டும் என கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

அவரது கோரிக்கை மனுவை பரிசீலித்து உடனடியாக ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் உடனடியாக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அவருக்கான மருத்துவ காப்பீட்டு அட்டையை வழங்கினார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...