கோரிக்கை வைத்த மலைவாழ் மக்கள் - உடனடி நடவடிக்கை எடுத்த கோவை ஆட்சியர்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்ற ஆட்சியர் கிராந்திகுமார், உயிருக்கு போராடும் மலைவாழ் மக்களை சேர்ந்தவருக்கு உடனடி மருத்துவ காப்பீடு திட்டம் அட்டையை வழங்கினார்.


கோவை: மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் ஆனைகட்டி வடக்கலூர் மலைவாழ் பகுதியை சேர்ந்த மல்லன் என்பவர் அவரது மகள் மற்றும் மருமகன் பாலக்காடு சாலையில் ஈச்சர் வாகனத்தில் வாழைக்காய் லோடு ஏற்றி சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத தருணத்தில் நடைபெற்ற விபத்தில் மருமகன் சம்பவ இடத்தில் உயிரிழந்ததாகவும் அவரது மகள் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாகவும் மனு அளித்தார்.

தற்பொழுது கேரள மாநிலம் கோட்டையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில் மகளுக்கு உடனடியாக மேல் சிகிச்சை அளிக்க முதல்வரின் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்க வேண்டும் என கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

அவரது கோரிக்கை மனுவை பரிசீலித்து உடனடியாக ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் உடனடியாக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அவருக்கான மருத்துவ காப்பீட்டு அட்டையை வழங்கினார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...