வெள்ளலூர் பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் - கோவை மாவட்ட ஆட்சியரிடம் மீட்பு குழு மனு

வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மீண்டும் துவக்கி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மீட்பு குழுவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.


கோவை: பேருந்து நிலைய பணிகள் முழுமையாக முடிந்தால், அனைத்து பிரதான சாலைகளுக்கும் அண்டை மாநிலங்களில் சென்று வர போக்குவரத்து மிகவும் எளிதாக இருக்கும் என வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.



வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மீண்டும் துவக்கி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மீட்பு குழுவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் என்பது கோவை மக்களின் நீண்ட கனவு. அவிநாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை மார்க்கமாக செல்லும் பயணிகளின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள் துவங்கி சுமார் 40 கோடி மதிப்பீட்டில் 65 சதவிகிதப் பணிகள் முடிந்துள்ளது.



இந்த நிலையில் முற்றிலுமாக அப்பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு உள்ள அவர்கள், இந்த பேருந்து நிலையம் அமைந்தால் அனைத்து பிரதான சாலைகளுக்கும் அண்டை மாநிலங்களில் சென்று வர போக்குவரத்து மிகவும் எளிதாக இருக்கும் என குறிபிட்டுள்ளனர்.

மேலும் நீலாம்பூர் செட்டிபாளையம் என வேறு பகுதிகளுக்கு பேருந்து நிலையம் கட்டும் திட்டத்தை மாற்றினால் அது கூடுதல் செலவு மற்றும் காலதாமதம் ஆகும். எனவே நிறுத்தப்பட்ட வெள்ளலூர் பேருந்து நிலைய பணிகளை முற்றிலுமாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.



இது குறித்து அவர்கள் கூறுகையில் இப்பணிகள் இதுவரை நடைபெற்றது. எல்லாம் மக்கள் வரிப்பணம் தான். தற்பொழுது இப்பணிகள் முற்றிலுமாக நிறுத்தும் பட்சத்தில் மக்கள் வரிப்பணம் வீணாக கூடும். பாதி பணிகளில் நிறுத்தப்பட்ட அந்த வெள்ளலூர் பேருந்து நிலையத்திற்குள் மது அருந்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களை சிலர் அரங்கேற்றி வருவதாக மீட்பு குழுவினர் புகார் தெரிவித்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...