வெள்ளலூர் பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் - கோவை மாவட்ட ஆட்சியரிடம் மீட்பு குழு மனு

வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மீண்டும் துவக்கி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மீட்பு குழுவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.


கோவை: பேருந்து நிலைய பணிகள் முழுமையாக முடிந்தால், அனைத்து பிரதான சாலைகளுக்கும் அண்டை மாநிலங்களில் சென்று வர போக்குவரத்து மிகவும் எளிதாக இருக்கும் என வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.



வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மீண்டும் துவக்கி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மீட்பு குழுவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் என்பது கோவை மக்களின் நீண்ட கனவு. அவிநாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை மார்க்கமாக செல்லும் பயணிகளின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள் துவங்கி சுமார் 40 கோடி மதிப்பீட்டில் 65 சதவிகிதப் பணிகள் முடிந்துள்ளது.



இந்த நிலையில் முற்றிலுமாக அப்பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு உள்ள அவர்கள், இந்த பேருந்து நிலையம் அமைந்தால் அனைத்து பிரதான சாலைகளுக்கும் அண்டை மாநிலங்களில் சென்று வர போக்குவரத்து மிகவும் எளிதாக இருக்கும் என குறிபிட்டுள்ளனர்.

மேலும் நீலாம்பூர் செட்டிபாளையம் என வேறு பகுதிகளுக்கு பேருந்து நிலையம் கட்டும் திட்டத்தை மாற்றினால் அது கூடுதல் செலவு மற்றும் காலதாமதம் ஆகும். எனவே நிறுத்தப்பட்ட வெள்ளலூர் பேருந்து நிலைய பணிகளை முற்றிலுமாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.



இது குறித்து அவர்கள் கூறுகையில் இப்பணிகள் இதுவரை நடைபெற்றது. எல்லாம் மக்கள் வரிப்பணம் தான். தற்பொழுது இப்பணிகள் முற்றிலுமாக நிறுத்தும் பட்சத்தில் மக்கள் வரிப்பணம் வீணாக கூடும். பாதி பணிகளில் நிறுத்தப்பட்ட அந்த வெள்ளலூர் பேருந்து நிலையத்திற்குள் மது அருந்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களை சிலர் அரங்கேற்றி வருவதாக மீட்பு குழுவினர் புகார் தெரிவித்தனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...