நிலத்திற்கு இழப்பீடு தர வேண்டும் - தாராபுரத்தில் 43வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் கோனாரிபட்டி அருகேயுள்ள நல்லதங்கள் அணைக்கட்டுவதற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் இழப்பீட்டு கேட்டு தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 43வது நாளில் மண்டியிட்டு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.



திருப்பூர்: நிலத்திற்கு இழப்பீடு வழங்காவிட்டால் விரைவில் சென்னையில் உள்ள தலைமை செயலகம் முன்பு மாபெரும் போராட்டம் நடைபெறும் என நல்லத்தங்காள் அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கோனாரிபட்டி அருகே நல்லதங்காள் நீர் பிடிப்பு அணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டுவதற்காக 97 விவசாயிகள் 850 ஏக்கர் நிலத்தை கொடுத்துள்ளனர். இதற்கு இழப்பீடு கேட்டு நீதிமன்றம் வரை சென்றும் இதுவரை இழப்பீடு வழங்காமல் அதிகாரிகள் அடாவடியில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.



43வது நாளான நேற்று மண்டியிட்டு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் விரைவில் சென்னையில் உள்ள தலைமை செயலகம் முன்பு மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...