காங்கேயத்தில் மேற்கு மண்டல திமுக பூத் முகவர்கள் கூட்டம் - செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் கொடியேற்றி துவக்கி வைத்தார்

முதலமைச்சர் முக.ஸ்டாலின் முன்னிலையில் காங்கேயத்தில் திமுக பூத் கமிட்டியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மேற்கு மண்டலத்தை சேர்ந்த 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.



திருப்பூர்: மேற்கு மண்டல திமுக பூத் முகவர்கள் கூட்டம் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே படியூரில் நடைபெற்றது. 14 திமுக மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட 50 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 14,411 பூத் முகவர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் கலந்து கொண்டு பூத் முகவர்களின் பங்களிப்பு மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது, சமூக வலைதள பயன்பாடு உள்ளிட்டவை குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தை மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் கொடியேற்றி துவக்கி வைத்தனர்.



பூத் முகவர்கள் கட்சி நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

இந்த நிகழ்வில் சைவம் மற்றும் அசைவ உணவு தயாரிக்கப்பட்டு கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டன.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...