காங்கேயத்தில் மேற்கு மண்டல திமுக பூத் முகவர்கள் கூட்டம் - செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் கொடியேற்றி துவக்கி வைத்தார்

முதலமைச்சர் முக.ஸ்டாலின் முன்னிலையில் காங்கேயத்தில் திமுக பூத் கமிட்டியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மேற்கு மண்டலத்தை சேர்ந்த 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.



திருப்பூர்: மேற்கு மண்டல திமுக பூத் முகவர்கள் கூட்டம் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே படியூரில் நடைபெற்றது. 14 திமுக மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட 50 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 14,411 பூத் முகவர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் கலந்து கொண்டு பூத் முகவர்களின் பங்களிப்பு மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது, சமூக வலைதள பயன்பாடு உள்ளிட்டவை குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தை மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் கொடியேற்றி துவக்கி வைத்தனர்.



பூத் முகவர்கள் கட்சி நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

இந்த நிகழ்வில் சைவம் மற்றும் அசைவ உணவு தயாரிக்கப்பட்டு கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டன.

Newsletter

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...