பல்லடம் நான்கு பேர் கொலை வழக்கின் குற்றவாளிகள் நான்கு பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது

பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் கடந்த மூன்றாம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.



திருப்பூர்: நான்கு குற்றவாளிகள் மீது திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் பரிந்துரையின் படி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பிறப்பித்த உத்தரவுப்படி நான்கு பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் கடந்த மூன்றாம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நெல்லை மாவட்டத்தை சேர்ந்த குட்டி என்கின்ற வெங்கடேஷ், அவரது தந்தை ஐயப்பன், திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து, மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த சோனை முத்தையா ஆகிய நான்கு குற்றவாளிகள் மீது திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் பரிந்துரையின் படி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பிறப்பித்த உத்தரவுப்படி நான்கு பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையின் போது தப்பிக்க முயன்ற மனப்பாறையை சேர்ந்த செல்லமுத்து கால் முறிவு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் தப்பிக்க முயன்ற போது சுட்டுப் பிடிக்கப்பட்டு இரண்டு கால் முட்டிகளிலும் காயம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஐயப்பன் தேனி மாவட்டத்தை சேர்ந்த சோனை முத்தையா மற்றும் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட ராஜ்குமார் ஆகிய மூவரும் சிறையில் உள்ளனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான குட்டி என்கிற வெங்கடேஷ், செல்லமுத்து, ஐயப்பன், மற்றும் சோனை முத்தையா ஆகிய நான்கு பேர் மீதும் திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....