தேசிய ஊட்டச்சத்து மாத விழா - கோவையில் சத்துணவு ஊழியர்கள் மனித சங்கிலி விழிப்புணர்வு

தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி, கோவை ராமநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் சத்துணவு ஊழியர்கள் மனித சங்கிலி விழிப்புணர்வில் ஈடுபட்டனர்.



கோவை: 100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் ஒன்றிணைந்து ஊட்டச்சத்துக்கள் குறித்தும், ஊட்டசத்து மாதம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

செப்டம்பர் மாதம் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனைமுன்னிட்டு மாதத்தின் துவக்கத்திலிருந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அங்கன்வாடி ஊழியர்களால் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் திட்டம் 4 சிங்காநல்லூர் வட்டாரம் மற்றும் சர்க்கார் சாமகுளம் வட்டாரம் சார்பில் ராமநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் 100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் ஒன்றிணைந்து ஊட்டச்சத்துக்கள் குறித்தும், ஊட்டசத்து மாதம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி நிகழ்ச்சி நடத்தினர்.



கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பிறந்த குழந்தை முதல் ஆறு வயது வரை குழந்தைகளின் ஊட்டச்சத்தை உறுதி செய்ய இந்த மாதம் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...