டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - யானைகளுக்கு சிறப்பு பூஜை

பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் வளர்ப்பு யானைகள் முகாமில், விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது யானைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.


கோவை: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு யானைகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, யானைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு பழ வகைகள் உணவாக வழங்கப்பட்டன.

பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் வளர்ப்பு யானைகள் முகாமில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, உலாந்தி வனச்சகரம் டாப்சிலிப் அருகே, கோழிகமுத்தி முகாமில், 26 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்படுகின்றன.

இந்த முகாமில், விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது.புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்ரமணியம், துணை இயக்குனர் பார்கவதேஜா முன்னிலை வகித்தனர். உதவி வன பாதுகாவலர் செல்வம், வனச்சரகர் சுந்தரவேல் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அங்குள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவிலில் வரிசையாக யானைகள் நிறுத்தப்பட்டன. அதன்பின், விநாயகப்பெருமானுக்கும், யானைகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, யானைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன், பழ வகைகள் உணவாக வழங்கப்பட்டன.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...