மரம்‌ தங்கசாமி நினைவு நாள்‌ - தமிழகம்‌ முழுவதும்‌ 1.68 லட்சம்‌ மரக்கன்றுகளை நடவு செய்த காவேரி கூக்குரல்‌!

மரங்களுக்காக தன்‌ வாழ்நாளை அர்ப்பணித்த மரம்‌ தங்கசாமியின்‌ நினைவு தினத்தை முன்னிட்டு ஈஷாவின் காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌ சார்பில்‌ தமிழகம்‌ முழுவதும்‌ 1.68 லட்சம்‌ மரக்கன்றுகள்‌ கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி நடவு செய்யப்பட்டது.


கோவை: மரங்களுக்காக தன்‌ வாழ்நாளை அர்ப்பணித்த மரம்‌ தங்கசாமியின் நினைவு தினத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌ சார்பில்‌ தமிழகம்‌ முழுவதும்‌ 1.68 லட்சம்‌ மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டத்தில்‌ பிறந்த மரம்‌ தங்கசாமி, 'வாழ்வோம்‌ மரங்களுடன்‌' என்ற தாரக மந்திரத்துடன்‌ டிம்பர்‌ மர சாகுபடியை விவசாயிகளிடம்‌ பிரபலப்படுத்தியவர்‌. புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளிடம்‌ மரம்‌ சார்ந்த விவசாயத்தை ஊக்குவித்து மாவட்டத்தையே பசுமையாக மாற்றி காட்டியவர்‌.

விவசாயிகளின்‌ வறுமையை‌ போக்க டிம்பர்‌ மரங்கள்‌ சாகுபடியே சரியான தீர்வு என்பதை உணர்ந்து தன்‌ வாழ்நாளை அதற்காக அர்ப்பணித்தவர்‌. அவர்‌ காவேரி கூக்குரல்‌ இயக்கத்தின்‌ தொடக்க கால இயக்கமான ஈஷா பசுமை கரங்கள்‌ திட்டத்துடன்‌ இணைந்து செயல்புரிந்தவர்‌.

இந்நிலையில்‌, அவரின்‌ சேவையை நினைவு கூறும்‌ விதமாகவும்‌, அவரின்‌ நினைவு நாளில்‌ விவசாய நிலங்களில்‌ மரக்கன்றுகள்‌ நடும்‌ பணியை காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌ ஆண்டுதோறும்‌ மேற்கொண்டு வருகிறது.



அந்த வகையில்‌ இந்தாண்டு, தமிழ்நாடு முழுவதும்‌ 100 விவசாயிகளின்‌ நிலங்களில்‌ சுமார்‌ 4000 ஏக்கர்‌ பரப்பளவில்‌ 1 லட்சத்து 68 ஆயிரம்‌ டிம்பர்‌ மரக்கன்றுகளை விவசாயிகள்‌ மூலம்‌ நடவு செய்து சாதனை படைத்துள்ளது.



சுற்றுச்கூழலுடன்‌ சேர்த்து விவசாயிகளின்‌ பொருளாதாரமும்‌ மேம்படும்‌ வண்ணம்‌, தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள்‌ கடம்பு, மகாகனி, குமிழ்‌, சந்தனம்‌ உள்ளிட்ட விலைமதிப்புமிக்க டிம்பர்‌ மரக்கன்றுகள்‌ ஒரு மரக்கன்று ரூ.3 என்ற குறைந்த விலையில்‌ விவசாயிகளுக்கு மானிய விலையில்‌ வழங்கப்பட்டது.



மேலும்‌, காவேரி கூக்குரல்‌ இயக்கத்தின்‌ களப்‌ பணியாளர்கள்‌ விவசாயிகளின்‌ நிலத்தின்‌ தன்மை மற்றும்‌ எதிர்கால தேவை ஆகியவற்றை பரிச்லித்து அதற்கேற்ப மண்ணுக்கேற்ற மரங்களை பரிந்துரைத்தனர்‌.



அத்துடன்‌, அவற்றை முறையாக நடும்‌ வழிமுறைகளையும்‌ எடுத்துரைத்தனர்‌.

இதற்கு முன்பு நம்மாழ்வார்‌, நெல்‌ ஜெயராமன்‌, மகாத்மா காந்தி போன்றோரின்‌ பிறந்த நாள்‌ மற்றும்‌ நினைவு நாட்களிலும்‌ இதுபோன்ற மாபெரும்‌ மரக்கன்றுகள்‌ நடும்‌ பணியை இவ்வியக்கம்‌ மேற்கொண்டது குறிப்பிடத்தது. மரம்‌ சார்ந்த விவசாயம்‌ தொடர்பாக இலவச ஆலோசனைகள்‌ பெற விரும்பும்‌ விவசாயிகள்‌ 80009 80009 என்ற எண்ணில்‌ தொடர்பு கொள்ளலாம்‌.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...