மரம்‌ தங்கசாமி நினைவு நாள்‌ - தமிழகம்‌ முழுவதும்‌ 1.68 லட்சம்‌ மரக்கன்றுகளை நடவு செய்த காவேரி கூக்குரல்‌!

மரங்களுக்காக தன்‌ வாழ்நாளை அர்ப்பணித்த மரம்‌ தங்கசாமியின்‌ நினைவு தினத்தை முன்னிட்டு ஈஷாவின் காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌ சார்பில்‌ தமிழகம்‌ முழுவதும்‌ 1.68 லட்சம்‌ மரக்கன்றுகள்‌ கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி நடவு செய்யப்பட்டது.


கோவை: மரங்களுக்காக தன்‌ வாழ்நாளை அர்ப்பணித்த மரம்‌ தங்கசாமியின் நினைவு தினத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌ சார்பில்‌ தமிழகம்‌ முழுவதும்‌ 1.68 லட்சம்‌ மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டத்தில்‌ பிறந்த மரம்‌ தங்கசாமி, 'வாழ்வோம்‌ மரங்களுடன்‌' என்ற தாரக மந்திரத்துடன்‌ டிம்பர்‌ மர சாகுபடியை விவசாயிகளிடம்‌ பிரபலப்படுத்தியவர்‌. புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளிடம்‌ மரம்‌ சார்ந்த விவசாயத்தை ஊக்குவித்து மாவட்டத்தையே பசுமையாக மாற்றி காட்டியவர்‌.

விவசாயிகளின்‌ வறுமையை‌ போக்க டிம்பர்‌ மரங்கள்‌ சாகுபடியே சரியான தீர்வு என்பதை உணர்ந்து தன்‌ வாழ்நாளை அதற்காக அர்ப்பணித்தவர்‌. அவர்‌ காவேரி கூக்குரல்‌ இயக்கத்தின்‌ தொடக்க கால இயக்கமான ஈஷா பசுமை கரங்கள்‌ திட்டத்துடன்‌ இணைந்து செயல்புரிந்தவர்‌.

இந்நிலையில்‌, அவரின்‌ சேவையை நினைவு கூறும்‌ விதமாகவும்‌, அவரின்‌ நினைவு நாளில்‌ விவசாய நிலங்களில்‌ மரக்கன்றுகள்‌ நடும்‌ பணியை காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌ ஆண்டுதோறும்‌ மேற்கொண்டு வருகிறது.



அந்த வகையில்‌ இந்தாண்டு, தமிழ்நாடு முழுவதும்‌ 100 விவசாயிகளின்‌ நிலங்களில்‌ சுமார்‌ 4000 ஏக்கர்‌ பரப்பளவில்‌ 1 லட்சத்து 68 ஆயிரம்‌ டிம்பர்‌ மரக்கன்றுகளை விவசாயிகள்‌ மூலம்‌ நடவு செய்து சாதனை படைத்துள்ளது.



சுற்றுச்கூழலுடன்‌ சேர்த்து விவசாயிகளின்‌ பொருளாதாரமும்‌ மேம்படும்‌ வண்ணம்‌, தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள்‌ கடம்பு, மகாகனி, குமிழ்‌, சந்தனம்‌ உள்ளிட்ட விலைமதிப்புமிக்க டிம்பர்‌ மரக்கன்றுகள்‌ ஒரு மரக்கன்று ரூ.3 என்ற குறைந்த விலையில்‌ விவசாயிகளுக்கு மானிய விலையில்‌ வழங்கப்பட்டது.



மேலும்‌, காவேரி கூக்குரல்‌ இயக்கத்தின்‌ களப்‌ பணியாளர்கள்‌ விவசாயிகளின்‌ நிலத்தின்‌ தன்மை மற்றும்‌ எதிர்கால தேவை ஆகியவற்றை பரிச்லித்து அதற்கேற்ப மண்ணுக்கேற்ற மரங்களை பரிந்துரைத்தனர்‌.



அத்துடன்‌, அவற்றை முறையாக நடும்‌ வழிமுறைகளையும்‌ எடுத்துரைத்தனர்‌.

இதற்கு முன்பு நம்மாழ்வார்‌, நெல்‌ ஜெயராமன்‌, மகாத்மா காந்தி போன்றோரின்‌ பிறந்த நாள்‌ மற்றும்‌ நினைவு நாட்களிலும்‌ இதுபோன்ற மாபெரும்‌ மரக்கன்றுகள்‌ நடும்‌ பணியை இவ்வியக்கம்‌ மேற்கொண்டது குறிப்பிடத்தது. மரம்‌ சார்ந்த விவசாயம்‌ தொடர்பாக இலவச ஆலோசனைகள்‌ பெற விரும்பும்‌ விவசாயிகள்‌ 80009 80009 என்ற எண்ணில்‌ தொடர்பு கொள்ளலாம்‌.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...