அதிமுகவை யாரும் அழிக்க முடியாது - உடுமலையில் வைகைச் செல்வன் சூளுரை

உடுமலை சட்டமன்ற தொகுதி சார்பில் பெதப்பம்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவுறுத்தல் படி பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கட்டிடங்கள் நலத்திட்டங்களை தற்பொழுது திமுகவினர் தாங்காள் கொண்டு வந்ததை போல விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள் என வைகைச் செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி சார்பில் பெதப்பம்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவுறுத்தல் படி பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பர்ராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியாதவது,



உடுமலை சட்டமன்ற தொகுதியில் சுமார் 400 கோடி அளவில் மக்களுக்கு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கட்டிடங்கள் நலத்திட்டங்களை தற்பொழுது திமுகவினர் தாங்காள் கொண்டு வந்ததை போல விளம்பரம் தேடிக் கொள்கின்றனர்.



வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று அவர் பேசினார். இதேபோல முன்னாள் அமைச்சர் இலக்கிய அணி செயலாளருமான வைகைச் செல்வன் சிறப்புரையாற்றினார்.



கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதிமுக அம்மையார் மறைவிற்கு பின் அழிந்து போகும் என பேசி வந்தவர்கள் தற்பொழுது வாயடைத்து உள்ளனர். காரணம் இந்தியாவிலேயே கிளைச் செயலாளர் முதல்வர் ஆகும் ஒரே கட்சி அதிமுக தான்.



திமுக அரசு வாரிசு அரசியலை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளது. மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இனிவரும் காலங்களில் திமுகவிற்கு தகுந்த பாடம் புகப்பட்டப்படும் என்றார்.

இந்தக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், பிரனேஷ், உடுமலை நகர செயலாளர் ஹக்கீம், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் எஸ்.எம்.நாகராஜ், நகர ஒன்றிய பேரூராட்சி மாவட்ட சார்பணி நிர்வாகிகள் உட்பட கலந்து கொண்டனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...