அதிமுகவை யாரும் அழிக்க முடியாது - உடுமலையில் வைகைச் செல்வன் சூளுரை

உடுமலை சட்டமன்ற தொகுதி சார்பில் பெதப்பம்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவுறுத்தல் படி பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கட்டிடங்கள் நலத்திட்டங்களை தற்பொழுது திமுகவினர் தாங்காள் கொண்டு வந்ததை போல விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள் என வைகைச் செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி சார்பில் பெதப்பம்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவுறுத்தல் படி பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பர்ராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியாதவது,



உடுமலை சட்டமன்ற தொகுதியில் சுமார் 400 கோடி அளவில் மக்களுக்கு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கட்டிடங்கள் நலத்திட்டங்களை தற்பொழுது திமுகவினர் தாங்காள் கொண்டு வந்ததை போல விளம்பரம் தேடிக் கொள்கின்றனர்.



வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று அவர் பேசினார். இதேபோல முன்னாள் அமைச்சர் இலக்கிய அணி செயலாளருமான வைகைச் செல்வன் சிறப்புரையாற்றினார்.



கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதிமுக அம்மையார் மறைவிற்கு பின் அழிந்து போகும் என பேசி வந்தவர்கள் தற்பொழுது வாயடைத்து உள்ளனர். காரணம் இந்தியாவிலேயே கிளைச் செயலாளர் முதல்வர் ஆகும் ஒரே கட்சி அதிமுக தான்.



திமுக அரசு வாரிசு அரசியலை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளது. மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இனிவரும் காலங்களில் திமுகவிற்கு தகுந்த பாடம் புகப்பட்டப்படும் என்றார்.

இந்தக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், பிரனேஷ், உடுமலை நகர செயலாளர் ஹக்கீம், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் எஸ்.எம்.நாகராஜ், நகர ஒன்றிய பேரூராட்சி மாவட்ட சார்பணி நிர்வாகிகள் உட்பட கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...