தாராபுரத்தில் பிளக்ஸ் பேனர் மேடை வைப்பதில் இபிஎஸ் - ஓபிஎஸ் அணிகளுக்கு இடையே மோதல்

அண்ணா பிறந்தநாளில் தாராபுரத்தில் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு பிளக்ஸ் பேனர் வைப்பதில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமான சூழல் நிலவுவதால் இருதரப்பு அணியினரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.



திருப்பூர்: நகராட்சி அலுவலகம் முன்பு அண்ணா பிறந்தநாளில் யார் பிளக்ஸ் பேனர் வைப்பது தொடர்பாக ஈபிஎஸ் அணியினரும், ஓபிஎஸ் அணியினரும் சரமாரியாக மோதிக்கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள் விழாவை இபிஎஸ் அணியினர் மற்றும் ஓபிஎஸ் அணியினர் காலை 10 மணிக்கு பழைய நகராட்சி அலுவலகம் முன்பு அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து கேக் வெட்டி இனிப்புகள் வழங்க திட்டமிட்டு இருந்தனர்.



இந்த நிலையில் நகராட்சி அலுவலகம் முன்பு அண்ணாவின் திருவுருவப்படம் வைப்பதற்கான மேடை அமைக்கும் பணியில் ஓபிஎஸ் அணியினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த எடப்பாடி அணியினர் ஆண்டு முழுவதும் அண்ணா சிலை அருகே உள்ள இடத்தில் நாங்கள் மேடை போடுவது வழக்கம்.

நாங்கள் மேடை போடும் இடத்தில் நீங்கள் மேடை போடாதீர்கள் என இபிஎஸ் அணியினர் ஓபிஎஸ் அணியினருடன் சண்டையிட்டனர். அதற்கு ஓபிஎஸ் அணியினர் பொது இடத்தில் யார் வேண்டுமானாலும் மேடை அமைக்கலாம் இதை யாரும் சொந்தம் கொள்ள முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.



அப்போது இரு தரப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தள்ளுமுள்ளாக மாறியது.



இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு வந்தனர்.



இரு தரப்பினர் கிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிமுக எடப்பாடி அணியினர் நீதிமன்ற தீர்ப்பின் படி அதிமுகவை உரிமை கொண்டாடும் உரிமை எங்களுக்கு மட்டுமே உள்ளது. ஓபிஎஸ் அணியினருக்கு அதிமுக கொடி பெயரை ஓபிஎஸ் அணி பயன்படுத்தக்கூடாது என தெரிவித்தனர்.

அப்போது ஓபிஎஸ்-இபிஎஸ் அணியினர் மோதிக்கொண்டனர். இதனால் தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு பதட்டமான சூழல் இருந்து வருகிறது.

அதிமுக எடப்பாடி அணியின் தற்போதைய நகர செயலாளர் சி.ஆர். ராஜேந்திரன் மற்றும் ஓபிஎஸ் அணி தாராபுரம் நகரச் செயலாளர் ஜகவர் ஆகியோர் இடத்தில் போலீசார் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

Newsletter

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...