தாராபுரத்தில் பிளக்ஸ் பேனர் மேடை வைப்பதில் இபிஎஸ் - ஓபிஎஸ் அணிகளுக்கு இடையே மோதல்

அண்ணா பிறந்தநாளில் தாராபுரத்தில் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு பிளக்ஸ் பேனர் வைப்பதில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமான சூழல் நிலவுவதால் இருதரப்பு அணியினரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.



திருப்பூர்: நகராட்சி அலுவலகம் முன்பு அண்ணா பிறந்தநாளில் யார் பிளக்ஸ் பேனர் வைப்பது தொடர்பாக ஈபிஎஸ் அணியினரும், ஓபிஎஸ் அணியினரும் சரமாரியாக மோதிக்கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள் விழாவை இபிஎஸ் அணியினர் மற்றும் ஓபிஎஸ் அணியினர் காலை 10 மணிக்கு பழைய நகராட்சி அலுவலகம் முன்பு அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து கேக் வெட்டி இனிப்புகள் வழங்க திட்டமிட்டு இருந்தனர்.



இந்த நிலையில் நகராட்சி அலுவலகம் முன்பு அண்ணாவின் திருவுருவப்படம் வைப்பதற்கான மேடை அமைக்கும் பணியில் ஓபிஎஸ் அணியினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த எடப்பாடி அணியினர் ஆண்டு முழுவதும் அண்ணா சிலை அருகே உள்ள இடத்தில் நாங்கள் மேடை போடுவது வழக்கம்.

நாங்கள் மேடை போடும் இடத்தில் நீங்கள் மேடை போடாதீர்கள் என இபிஎஸ் அணியினர் ஓபிஎஸ் அணியினருடன் சண்டையிட்டனர். அதற்கு ஓபிஎஸ் அணியினர் பொது இடத்தில் யார் வேண்டுமானாலும் மேடை அமைக்கலாம் இதை யாரும் சொந்தம் கொள்ள முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.



அப்போது இரு தரப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தள்ளுமுள்ளாக மாறியது.



இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு வந்தனர்.



இரு தரப்பினர் கிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிமுக எடப்பாடி அணியினர் நீதிமன்ற தீர்ப்பின் படி அதிமுகவை உரிமை கொண்டாடும் உரிமை எங்களுக்கு மட்டுமே உள்ளது. ஓபிஎஸ் அணியினருக்கு அதிமுக கொடி பெயரை ஓபிஎஸ் அணி பயன்படுத்தக்கூடாது என தெரிவித்தனர்.

அப்போது ஓபிஎஸ்-இபிஎஸ் அணியினர் மோதிக்கொண்டனர். இதனால் தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு பதட்டமான சூழல் இருந்து வருகிறது.

அதிமுக எடப்பாடி அணியின் தற்போதைய நகர செயலாளர் சி.ஆர். ராஜேந்திரன் மற்றும் ஓபிஎஸ் அணி தாராபுரம் நகரச் செயலாளர் ஜகவர் ஆகியோர் இடத்தில் போலீசார் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...