திருப்பூரில் காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு முழு உடல் பரிசோதனை முகாம்!

திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள நல்லூர் பகுதியில் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் காவல்துறையினர் மற்றும் காவல் துறையினரின் குடும்பத்தார் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



திருப்பூர்: காங்கேயம் சாலை நல்லூர் பகுதியில் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.



பொதுமக்களின் நலனுக்காக தங்களது குடும்பத்தையும் மறந்து இரவு பகலாக பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு மன உளைச்சலை தடுக்கும் வகையிலும் காவல்துறை பொதுமக்களின் நண்பன் எனும் வகையில், பசியில்லா திருப்பூர் அறக்கட்டளை, ரேவதி மெடிக்கல் சென்டர் மற்றும் ஐ பவுண்டேஷன் சார்பில் காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கும், காவலர்களின் குடும்பத்தினருக்கும் முழு உடல் பரிசோதனை முகாம் திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள நல்லூர் பகுதியில் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமினை நல்லூர் சரக காவல் உதவி ஆணையர் நந்தினி துவக்கி வைத்தார்.



தொடர்ந்து இந்த மருத்துவ முகாமில் கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, பல் தொடர்பான பிரச்சனைகள், இருதயம் தொடர்பான பிரச்சனைகள் என பரிசோதனைகள் செய்யப்பட்டது.



இந்த மருத்துவ முகாமில் காவல்துறையினர் மற்றும் காவல் துறையினரின் குடும்பத்தார் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...