திருப்பூரில் காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு முழு உடல் பரிசோதனை முகாம்!

திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள நல்லூர் பகுதியில் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் காவல்துறையினர் மற்றும் காவல் துறையினரின் குடும்பத்தார் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



திருப்பூர்: காங்கேயம் சாலை நல்லூர் பகுதியில் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.



பொதுமக்களின் நலனுக்காக தங்களது குடும்பத்தையும் மறந்து இரவு பகலாக பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு மன உளைச்சலை தடுக்கும் வகையிலும் காவல்துறை பொதுமக்களின் நண்பன் எனும் வகையில், பசியில்லா திருப்பூர் அறக்கட்டளை, ரேவதி மெடிக்கல் சென்டர் மற்றும் ஐ பவுண்டேஷன் சார்பில் காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கும், காவலர்களின் குடும்பத்தினருக்கும் முழு உடல் பரிசோதனை முகாம் திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள நல்லூர் பகுதியில் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமினை நல்லூர் சரக காவல் உதவி ஆணையர் நந்தினி துவக்கி வைத்தார்.



தொடர்ந்து இந்த மருத்துவ முகாமில் கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, பல் தொடர்பான பிரச்சனைகள், இருதயம் தொடர்பான பிரச்சனைகள் என பரிசோதனைகள் செய்யப்பட்டது.



இந்த மருத்துவ முகாமில் காவல்துறையினர் மற்றும் காவல் துறையினரின் குடும்பத்தார் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...