திருப்பூரில் காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு முழு உடல் பரிசோதனை முகாம்!

திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள நல்லூர் பகுதியில் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் காவல்துறையினர் மற்றும் காவல் துறையினரின் குடும்பத்தார் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



திருப்பூர்: காங்கேயம் சாலை நல்லூர் பகுதியில் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.



பொதுமக்களின் நலனுக்காக தங்களது குடும்பத்தையும் மறந்து இரவு பகலாக பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு மன உளைச்சலை தடுக்கும் வகையிலும் காவல்துறை பொதுமக்களின் நண்பன் எனும் வகையில், பசியில்லா திருப்பூர் அறக்கட்டளை, ரேவதி மெடிக்கல் சென்டர் மற்றும் ஐ பவுண்டேஷன் சார்பில் காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கும், காவலர்களின் குடும்பத்தினருக்கும் முழு உடல் பரிசோதனை முகாம் திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள நல்லூர் பகுதியில் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமினை நல்லூர் சரக காவல் உதவி ஆணையர் நந்தினி துவக்கி வைத்தார்.



தொடர்ந்து இந்த மருத்துவ முகாமில் கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, பல் தொடர்பான பிரச்சனைகள், இருதயம் தொடர்பான பிரச்சனைகள் என பரிசோதனைகள் செய்யப்பட்டது.



இந்த மருத்துவ முகாமில் காவல்துறையினர் மற்றும் காவல் துறையினரின் குடும்பத்தார் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...