கோவையில் ரயில் நிறுத்த வளாகம் அமைத்திடுக.!! ரயில்வே வாரிய தலைவருக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கடிதம்!

கோவை மற்றும் போத்தனூர் ரயில் நிலையங்களில் புதிய ரயில் பெட்டிகள் நிறுத்தி பராமரிக்க பிட் லைன் அமைக்க வேண்டும் என்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.


கோவை: போத்தனூர் ரயில் நிலையத்தில் புதிய ரயில் பெட்டிகள் நிறுத்திமிடம் மற்றும் பராமரிப்பு மையம் 3 பிட் லைன்கள் மற்றும் 4 ஸ்டேபிலிங் லைன்களுடன் அமைக்க வேண்டும் என்று ரயில்வே வாரியத் தலைவருக்உ நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கடிதம் எழுதியுள்ளார்.

கோவை மற்றும் போத்தனூர் ரயில் நிலையங்களில் புதிய ரயில் பெட்டிகள் நிறுத்தி பராமரிக்க பிட் லைன் அமைக்க வேண்டும் என்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

ரயில்வே வாரியத் தலைவருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, கோவை தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும். தென்னக இரயில்வேயில் அதிக வருமானம் ஈட்டும் நிலையங்களில் கோவை ரயில் நிலையம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இத்தகைய சிறப்பு மிக்க பகுதியில் இருந்து புதிய ரயில்கள் இயக்க கோரிக்கைகள் வைக்கும் போதெல்லாம் ரயில்வே நிர்வாகம், கோவை ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகள் நிறுத்திட போதிய இடவசதி இல்லாததால் புதிய ரயில்கள் அறிவிக்க இயலவில்லை என்று காரணம் சொல்லி வருகின்றது. இதன் காரணமாக கோவை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள போத்தனூர் ரயில் நிலையத்தில் பெட்டிகள் நிறுத்துமிடம் மற்றும் பராமரிப்பு மையம் அமைத்திட வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.

ஆனாலும் அக்கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. சமீபத்தில் சேலம் ரயில்வே கோட்டம் இதற்கென அனுப்பிய முன்மொழிவுகள் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அறிகிறேன். போத்தனூர் ரயில் நிலையத்தில் புதிய ரயில் பெட்டிகள் நிறுத்திமிடம் மற்றும் பராமரிப்பு மையம் 3 பிட் லைன்கள் மற்றும் 4 ஸ்டேபிலிங் லைன்களுடன் அமைத்திட தென்னக இரயில்வே பொதுமேலாளர் ஒப்புதலுடன், ரயில்வே வாரியத்தின் நிர்வாக இயக்குநர் (பணிகள்) அவர்களுக்கு அனுப்பப்பட்ட முன்மொழிவு இன்னும் நிலுவையில் உள்ளது.

ரயில் பெட்டிகள் நிறுத்திமிடம் மற்றும் பராமரிப்பு மையம் புதிதாக அமைத்திடாமல், கோவையில் இருந்து புதிய ரயில்கள் சாத்தியம் இல்லை என்ற சூழல் உள்ளது. எனவே , கொடுக்கப்பட்ட முன்மொழிவுகள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறேன். அது நடைமுறைப்படுத்துவது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...