கோவை வந்தடைந்தன தித்திக்கும் மாம்பழங்கள்

மாம்பழத்தை விரும்பாதவர் மாநிலத்தில் உண்டோ! என்ற கூற்றுக்கேற்ப குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பழம் மாம்பழம். கோடை காலத்தின் தொடக்க நேரத்தில் மாம்பழங்கள் நம் ஊர் மார்க்கெட்டுகளில் இடம்பிடிக்கிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு முன்கூட்டியே மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.



சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்கள் அதிக வெப்ப நிலை கொண்ட மாவட்டங்கள் ஆகும். இங்கு தான் அதிக அளவில் மாம்பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு மொத்தமாக சுமார் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மாம்பழங்கள் பயிரிடப்படுகின்றன.



இம்மாவட்டங்களில் உற்பத்தியான மாம்பழங்கள் தற்போது உண்பதற்கு தயாரான நிலையில் கோவை மார்கெட்டுகளில் இறங்கியுள்ளன. இருந்த போதும் கடந்த அண்டை விட இந்தாண்டு மாம்பழ வரத்து குறைவாக உள்ளதாகவும், அதனால் வியாபாரம் மந்தமான நிலையில் இருப்பதாகவும் கோவை மொத்த வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.



இது குறித்து உக்கடம் பகுதியில் பழ மண்டி வைத்திருக்கும் வியாபாரி ஷாஜகான் கூறியதாவது:-

வழக்கமாக மாம்பழ வரத்து பிப்ரவரி மாதம் தொடங்கி ஜுலை மாதம் வரை இருக்கும். இந்த வருடம் பருவ மழை பொய்த்துப் போனதால் மாங்காய்கள் வரத்து மிகவும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 75 முதல் 80 சதவிகிதமாக இருந்த மாங்காய் வரத்து தற்போது 35 சதவிகிதமாக குறைந்துள்ளது.



வகைகள்

மாம்பழங்களில் பல்வேறு வகைகள் உள்ளன. அதில், செந்தூரம், நீலம், பங்கனபள்ளி, நெடுஞ்சோலை, இமாம் பசந்த், ஆபூஸ், கிளிமூக்கு போன்ற ராகங்கள் அதிகம் விற்பனையாகின்றன. மாங்காய் வரத்து குறைவு என்பதோடு, இந்த ஆண்டு வியாபாரமும் மந்தமான நிலையில் தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



விலை விபரம்- (கிலோ) (மொத்த வியாபாரம்)

செந்தூரம் - ரூ.60

பங்கனபள்ளி - ரூ.80

நெடுஞ்சோலை - ரூ.60

இமாம் பசந்த் - ரூ.150

ஆபூஸ் - ரூ.120

கிளிமூக்கு - ரூ.20

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...