இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது - கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஷ்ட்ரிய இந்து மகாசபா மனு

செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளையொட்டி, இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஷ்ட்ரிய இந்து மகாசபா சார்பில் மனு அளிக்கப்பட்டது.


கோவை: இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை செய்வதை தமிழக அரசு பரிசீலனை செய்ய மாவட்ட ஆட்சியர் ஆவணம் செய்ய வேண்டும் என ராஷ்ட்ரிய இந்து மகாசபா சார்பில் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் நன்னடத்தை அடிப்படையில் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவர்கள்.

இந்நிலையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்தி ராஷ்ட்ரிய இந்து மகாசபா சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

அதன் மாநில தலைவர் வேலுசாமி தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தை திட்டமிட்டே சில இஸ்லாமிய அமைப்புகள் குண்டு வெடிப்பு குற்றவாளிகளை அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை செய்ய கோரி வருவதாகவும், இதனை தமிழக அரசு பரிசீலனை செய்ய மாவட்ட ஆட்சியர் ஆவணம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...