சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: கோவையில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

உயர்த்தப்பட்ட சுங்கச்சாவடி கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி கோவையில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: "ரோடு போட மக்கள் வரி ... எதுக்கையா சுங்கவரி", "வஞ்சிக்காதே வஞ்சிக்காதே வாகன ஓட்டிகளை வஞ்சிக்காதே", "திரும்ப பெறு திரும்ப பெறு உயர்த்திய கட்டணத்தை திரும்ப பெறு" என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர்.

பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பயன்பாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை உள்ளிட்டவற்றின் விலை விண்ணைத் தொட்டிருக்கும் நிலையில், சுங்கச்சாவடி கட்டணமும் ஒன்றிய அரசாங்கத்தால் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை ஆகியவற்றின் விலை ஒரு பக்கம் பொது மக்களின் பொருளாதாரத்தை பதம் பார்க்கும் நிலையில், சுங்க சாவடி கட்டண உயர்வும் இத்துடன் கைகோர்த்து இருக்கின்றது.

இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை அவரிவிதமாக உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் சுங்கச்சாவடி முன் ஒன்றிய அரசாங்கத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்திருந்தார்.



இந்த நிலையிலே தேமுதிக கோவை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொச்சின் சாலையில் உள்ள சுங்கச்சாவடி முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். "ரோடு போட மக்கள் வரி ... எதுக்கையா சுங்கவரி", "வஞ்சிக்காதே வஞ்சிக்காதே வாகன ஓட்டிகளை வஞ்சிக்காதே", "திரும்ப பெறு திரும்ப பெறு உயர்த்திய கட்டணத்தை திரும்ப பெறு" என ஆர்ப்பாட்டக்காரர்கள் முழங்கினர்.

சுங்கச்சாவடி கட்டண உயர்வால் தரைவழி வர்த்தகத்தை மையப்படுத்திய அனைத்து பொருட்களின் விலையும் அபரிவிதமாக உயரும் என குற்றம் சாட்டினர். அதே சமயம் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை உள்ளிட்டவற்றின் விலை நடுத்தர ஏழை மக்களை கடுமையாக பாதித்து இருக்கின்ற நிலையில், சுங்கச்சாவடி கட்டண உயர்வும் அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்க செய்து ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் காட்டமாக தெரிவித்தனர். எனவே சுங்கச்சாவடி கட்டணத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முறையான பொருளாதார நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



இந்த ஆர்பாட்டத்தில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் Ljj ஜெகன் தலைமையில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் சிங்கை k சந்துரு, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சண்முகவடிவேலு,மாநில மகளிர் அணி துணை செயலாளர் வனிதாதுரை, மாநில தொழிற்சங்க துணை சட்ட ஆலோசகர் முருகராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கோவை ஒருகிணைந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, தொழிற்சங்கம் உளளிட்ட அணைத்து நிர்வாகிகள் வார்டு கிளை கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...