சிறுமுகை வனத்துறை சார்பில் முன்கள பணியாளர்கள் விழிப்புணர்வு முகாம்!

சிறுமுகை வனத்துறை சார்பில் முன்களப் பணியாளர்கள், மனிதன் - வனவிலங்கு மோதலை கையாள்பவர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு வனத்துறைக்கு பல்வேறு கோரிக்கைகளை விடுத்தனர்.


கோவை: சிறுமுகை வனத்துறை சார்பில் முன்கள பணியாளர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தின் கீழ் சிறுமுகை வனத்துறை சார்பில் முன்களப் பணியாளர்கள், மனிதன் -வனவிலங்கு மோதலை கையாள்பவர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் அடுத்த வச்சினாம்பாளையம் கிராமத்தில் சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், கோவை மாவட்ட ஓய்வுபெற்ற உதவி வனப்பாதுகாவலர் நசீர், கோவை வன கால்நடை மருத்துவ பணிகள் கூடுதல் இயக்குநர் என்.எஸ்.மனோகரன், கோவை இணை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இதில் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பொதுமக்கள், விவசாயிகள் 100-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு முகாமில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பேசியதாவது, காட்டுப்பன்றி இனப்பெருக்கம் அதிகமாக உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இருந்த வனச்சட்டத்தை இன்றும் அரசு பயன்படுத்தி வருகிறது. விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றி, மயில், மான், காட்டு யானை ஆகியவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லிங்காபுரம் கிராமத்தில் முக்கு வளைவில் இருந்து வனச்சோதனை சாவடி வரை யானைகளுக்கான அகழியை அகலப்படுத்த வேண்டும். காட்டு யானைகளைவிட காட்டுப் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனை விவசா யிகள் சுட்டுகொல்ல அனுமதி வழங்க வேண்டும்.

வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேத தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். லிங்காபுரம் வனசோதனை சாவடியில் இருந்து காந்தவயல் வரை சாலையின் இருபுறமும் முட்புதர் அதிகளவில் உள்ளது. இதனை அப்புறப்படுத்த வேண்டும்.

லிங்காபுரம் பகுதியில் யானை தொல்லை அதிக ளவில் உள்ளது. விஸ்கோஸ் பகுதி யானைகள் முகாம் போல உள்ளது. எனவே அங்கு யானைகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதி ஒட்டியுள்ள விவசாயிகளுக்கு டார்ச் லைட் வழங்க வேண்டும்.

இரவு 6 மணிக்கு மேல் கிராமத்தில் நுழையும் யானைகளை விரட்ட வனத்துறை யினர் உடனடியாக வர வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

தொடர்ந்து வனச்சரக அலுவலர் மனோஜ் பேசியதாவது, பொதுமக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். கிராம பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கி வைத்திருப்பவர்கள் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நாட்டு வெடி குண்டு மூலம் வேட்டையாடுபவர்கள் குறித்தும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...