அமைச்சர் உதயநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்த சாமியார் உருவபொம்மை எரிப்பு!

சனாதன சர்ச்சை தொடர்பாக அமைச்சர் உதயநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சார்ய சாமியாரை கண்டித்து வால்பாறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர், அவரது உருவபொம்மையை எரித்து தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.



கோவை: அமைச்சர் உதயநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சாமியாரின் உருவ பொம்மை எரித்து வால்பாறையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்டம் வால்பாறையில் திமுக நகரச் செயலாளர் சுதாகர் தலைமையில், நகராட்சி அலுவலகத்திற்கு முன்பு அமைச்சர் உதயநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சாமியாரை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சார்ய சாமியாரின் உருவ பொம்மை எரித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.



வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற திமுகவினரின் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...