கிருஷ்ணரை வரவேற்க கண்ணன், ராதை வேடமிட்டு உற்சாக நடனமாடிய மூத்த குடிமக்கள்!

தாளியூரில் உள்ள மூத்த குடிமக்களின் குடியிருப்பான அனன்யா'ஸ் நானாநானி ஹோம்ஸில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கோகுலாஷ்டமி விழாவில், மூத்த குடிமக்கள், கண்ணன் மற்றும் ராதை வேடமிட்டு ஆடி பாடி கிருஷ்ணரை வரவேற்றனர்.



கோவை: தாளியூரில் உள்ள மூத்த குடிமக்கள் குடியிருப்பில் கோகுலாஷ்டமி விழாவில் மூத்த குடிமக்கள், கண்ணன் மற்றும் ராதை வேடமிட்டு ஆடி பாடி கிருஷ்ணரை வரவேற்றனர்.



கோவை மாவட்டம் தாளியூரில் உள்ள மூத்த குடிமக்களின் குடியிருப்பான அனன்யா'ஸ் நானாநானி ஹோம்ஸில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோகுலாஷ்டமி விழாவானது வெகு விமரிசையாக நடைபெற்றது.



இதை முன்னிட்டு காலை கோ பூஜை, நவகலச திருமஞ்சனம், விஸ்வரூப தரிசனமும் நடைபெற்றது. தொடர்ந்து, மாலை தங்கத்தேர் திருவீதி உலா புறப்பாடு நடைபெற்றது.



இதில், மூத்த குடிமக்கள் ராதா கிருஷ்ணர் வேடமிட்டு ஆடியும் பாடியும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை வரவேற்றனர்.



இங்குள்ள மூத்த குடிமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இவ்விழாவினை வெகு விமர்சையாக கொண்டாடினர். இந்நிர்வாகத்தின் இயக்குநர் Dr.உமா மகேஸ்வரி யுவராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவின் இறுதியில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...