கிருஷ்ணரை வரவேற்க கண்ணன், ராதை வேடமிட்டு உற்சாக நடனமாடிய மூத்த குடிமக்கள்!

தாளியூரில் உள்ள மூத்த குடிமக்களின் குடியிருப்பான அனன்யா'ஸ் நானாநானி ஹோம்ஸில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கோகுலாஷ்டமி விழாவில், மூத்த குடிமக்கள், கண்ணன் மற்றும் ராதை வேடமிட்டு ஆடி பாடி கிருஷ்ணரை வரவேற்றனர்.



கோவை: தாளியூரில் உள்ள மூத்த குடிமக்கள் குடியிருப்பில் கோகுலாஷ்டமி விழாவில் மூத்த குடிமக்கள், கண்ணன் மற்றும் ராதை வேடமிட்டு ஆடி பாடி கிருஷ்ணரை வரவேற்றனர்.



கோவை மாவட்டம் தாளியூரில் உள்ள மூத்த குடிமக்களின் குடியிருப்பான அனன்யா'ஸ் நானாநானி ஹோம்ஸில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோகுலாஷ்டமி விழாவானது வெகு விமரிசையாக நடைபெற்றது.



இதை முன்னிட்டு காலை கோ பூஜை, நவகலச திருமஞ்சனம், விஸ்வரூப தரிசனமும் நடைபெற்றது. தொடர்ந்து, மாலை தங்கத்தேர் திருவீதி உலா புறப்பாடு நடைபெற்றது.



இதில், மூத்த குடிமக்கள் ராதா கிருஷ்ணர் வேடமிட்டு ஆடியும் பாடியும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை வரவேற்றனர்.



இங்குள்ள மூத்த குடிமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இவ்விழாவினை வெகு விமர்சையாக கொண்டாடினர். இந்நிர்வாகத்தின் இயக்குநர் Dr.உமா மகேஸ்வரி யுவராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவின் இறுதியில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...