கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் - கோவையில் ரூ.72.58 மதிப்பில் இயந்திரங்கள் வழங்கல்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் கோவையில் 72.58 லட்சம் மதிப்பில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.



கோவை: 82 பவர் டில்லர்கள் மற்றும் 7 பவர் வீடர்கள் இயந்திரங்கள் 72.58 லட்சம் மதிப்பில் விவசாயிகளுக்கு 40% மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50% மானியத்தில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வழங்கினார்.



தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திர மயமாக்கும் துணை இயக்கத் திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் கிராம மக்களுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி வாயிலாக துவக்கி வைத்தார்.



அதன்படி கோவை மாவட்டத்தில் 82 பவர் டில்லர்கள் மற்றும் 7 பவர் வீடர்கள் இயந்திரங்கள் 72.58 லட்சம் மதிப்பில் விவசாயிகளுக்கு 40% மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50% மானியத்தில் வழங்கப்பட்டது.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு இந்த இயந்திரத்தை வழங்கினார்.



இந்நிகழ்வில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா உட்பட கோவை மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...