அண்ணா பிறந்தநாளில் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்..! காங்கேயத்தில் தடா ரஹீம் பேட்டி

30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள ஆயுள் சிறைவாசிகளை பாரபட்சம் இன்றி திமுக அரசு விடுதலை செய்ய வேண்டும். இல்லை என்றால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் திமுகவிற்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என திருப்பூரில் இந்திய தேசிய கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் பேட்டியளித்துள்ளார்.



திருப்பூர்: திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் அரசு நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்திய தேசிய கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் கேட்டுகொண்டுள்ளார்.



திருப்பூரில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி இந்திய தேசிய லீக் சார்பில் கோரிக்கை பொதுக்கூட்டம் காங்கேயம் சாலையில் உள்ள பெரிய தோட்டம் பகுதியில் திருப்பூர் மாவட்ட தலைவர் அஸ்லாம் பாஷா தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம் சிறப்புரையாற்றினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியாதவது,திமுக அரசு கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக அரசு அமைக்கப்பட்டால் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்ததனர். இதனால் தான் இஸ்லாமியர்கள் அனைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தினை தேர்வு செய்தார்கள். ஆனால் திமுக ஆட்சிக்கு பின்னால் திமுக அரசு ஆயில் சிறைவாசிகளை விடுதலை செய்வதில் பாரபட்சம் காட்டி வருகிறது.

ஆகவே அண்ணா பிறந்தநாள் அன்று ஆயுள் சிறைவாசிகளை திராவிட முன்னேற்றக் கழக அரசு விடுதலை செய்ய வேண்டும். இல்லை என்றால் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு பாடம் புகட்டுவார்கள். அதேபோல திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் அரசு நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...