அண்ணா பிறந்தநாளில் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்..! காங்கேயத்தில் தடா ரஹீம் பேட்டி

30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள ஆயுள் சிறைவாசிகளை பாரபட்சம் இன்றி திமுக அரசு விடுதலை செய்ய வேண்டும். இல்லை என்றால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் திமுகவிற்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என திருப்பூரில் இந்திய தேசிய கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் பேட்டியளித்துள்ளார்.



திருப்பூர்: திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் அரசு நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்திய தேசிய கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் கேட்டுகொண்டுள்ளார்.



திருப்பூரில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி இந்திய தேசிய லீக் சார்பில் கோரிக்கை பொதுக்கூட்டம் காங்கேயம் சாலையில் உள்ள பெரிய தோட்டம் பகுதியில் திருப்பூர் மாவட்ட தலைவர் அஸ்லாம் பாஷா தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம் சிறப்புரையாற்றினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியாதவது,திமுக அரசு கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக அரசு அமைக்கப்பட்டால் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்ததனர். இதனால் தான் இஸ்லாமியர்கள் அனைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தினை தேர்வு செய்தார்கள். ஆனால் திமுக ஆட்சிக்கு பின்னால் திமுக அரசு ஆயில் சிறைவாசிகளை விடுதலை செய்வதில் பாரபட்சம் காட்டி வருகிறது.

ஆகவே அண்ணா பிறந்தநாள் அன்று ஆயுள் சிறைவாசிகளை திராவிட முன்னேற்றக் கழக அரசு விடுதலை செய்ய வேண்டும். இல்லை என்றால் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு பாடம் புகட்டுவார்கள். அதேபோல திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் அரசு நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...