திருப்பூரில் சுழற்றி அடித்த சூறைக்காற்று… வடக்கு தாலுக்கா அலுவலகத்தில் 2 மரங்கள் முறிந்து விழுந்ததால் பரபரப்பு..!!

திருப்பூர் குமரன் ரோட்டில் வடக்கு தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்த இரண்டு மரங்கள் சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் முறிந்து விழுந்தன. நல்வாய்ப்பாக பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.



திருப்பூர்: சுழற்றி சுழற்றி அடித்த சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அரசு அலுவலகத்தில் இருந்த இரண்டு மரங்கள் பயங்கர சத்தத்துடன் முறிந்து விழுந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருப்பூர் குமரன் ரோட்டில் வடக்கு தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் இ சேவை மையம் கிளைச் சிறை ஆகியவையும் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தாலுகா அலுவலகம் மற்றும் இ சேவை மையங்களுக்கு தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக திருப்பூரில் அவ்வப்போது சூறைக்காற்றுடன் சாரல் மழையும் பெய்து வருகிறது.



திருப்பூர் தாலுக்கு அலுவலகத்தில் நிழல் தரும் வகையில் இருந்த இரண்டு மரங்கள் சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் முறிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.



இதனால் தாலுக்கா அலுவலகவளாகத்தில் சிறிது பரபரப்பு நிலவியது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...