தினமலர் நாளிதழுக்கு வலுக்கும் எதிர்ப்பு… கோவையில் மலம் வீசும் போராட்டம்..! தபெதிக வினர் கைது

தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை விமர்சித்து செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தினமலர் அலுவலகம் மீது மலம் வீசும் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 30 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.



கோவை: காலை சிற்றுண்டி திட்டத்தை கொச்சப்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த நாளிதழ் மீது மலத்தை வீசி கண்டனத்தை பதிவு செய்தனர்.



தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை விமர்சித்து செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தினமலர் அலுவலகம் மீது மலம் வீசும் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 30 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை விமர்சித்து தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டிருந்த நிலையில் பல்வேறு தரப்பில் அதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த நிலையில் கோவையில் சுந்தராபுரம் பகுதியில் உள்ள தினமலர் அலுவலகம் மீது மலம் வீசும் போராட்டம் நடத்தப்படும் என தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.



இந்த சூழலில் கட்சியின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் முப்பதுக்கும் மேற்பட்டோர் கோவை பொள்ளாச்சி சாலை சுந்தராபுரம் சந்திப்பு பகுதியில் ஒரு கையில் பிளாஸ்டிக் பைகளில் கொண்டு வந்த மலத்தையும் மற்றொரு கையில் தினமலர் நாளிதழ் செய்தி பிரசுரத்தையும் வைத்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தொடர்ந்து அங்கிருந்து தினமலர் அலுவலகம் நோக்கி சென்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதையடுத்து கையில் வைத்திருந்த நாளிதழ் பிரசுரத்தை சாலையில் போட்டும் அதன் மீது தாங்கள் கொண்டு வந்த மலத்தை வீசியும் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.



இதை தொடர்ந்து அதில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...