தினமலர் நாளிதழுக்கு வலுக்கும் எதிர்ப்பு… கோவையில் மலம் வீசும் போராட்டம்..! தபெதிக வினர் கைது

தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை விமர்சித்து செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தினமலர் அலுவலகம் மீது மலம் வீசும் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 30 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.



கோவை: காலை சிற்றுண்டி திட்டத்தை கொச்சப்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த நாளிதழ் மீது மலத்தை வீசி கண்டனத்தை பதிவு செய்தனர்.



தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை விமர்சித்து செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தினமலர் அலுவலகம் மீது மலம் வீசும் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 30 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை விமர்சித்து தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டிருந்த நிலையில் பல்வேறு தரப்பில் அதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த நிலையில் கோவையில் சுந்தராபுரம் பகுதியில் உள்ள தினமலர் அலுவலகம் மீது மலம் வீசும் போராட்டம் நடத்தப்படும் என தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.



இந்த சூழலில் கட்சியின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் முப்பதுக்கும் மேற்பட்டோர் கோவை பொள்ளாச்சி சாலை சுந்தராபுரம் சந்திப்பு பகுதியில் ஒரு கையில் பிளாஸ்டிக் பைகளில் கொண்டு வந்த மலத்தையும் மற்றொரு கையில் தினமலர் நாளிதழ் செய்தி பிரசுரத்தையும் வைத்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தொடர்ந்து அங்கிருந்து தினமலர் அலுவலகம் நோக்கி சென்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதையடுத்து கையில் வைத்திருந்த நாளிதழ் பிரசுரத்தை சாலையில் போட்டும் அதன் மீது தாங்கள் கொண்டு வந்த மலத்தை வீசியும் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.



இதை தொடர்ந்து அதில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...