தாராபுரத்தில் உள்ள இந்தியன் வங்கியின் மேல் தளத்தில் திடீர் தீ விபத்து - பழைய ஆவணங்கள் தீக்கிரையாகின!

தாராபுரம் இந்தியன் வங்கி கிளையின் மேல் தளத்தில், ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், கட்டிடத்தின் உரிமையாளர் சாந்தகுமாருக்கு சொந்தமான ஆவணங்கள் தீக்கிரையான நிலையில், தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



திருப்பூர்: தாராபுரத்தில் உள்ள இந்தியன் வங்கியின் மேல் தளத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் - உடுமலை சாலை சந்திப்பில், சாந்தகுமார் (60) என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வரும் தாராபுரம் இந்தியன் வங்கியின் இரண்டாவது தளத்தில் இருந்து, இன்று காலை 11 மணியளவில், திடீரென கரும் நிறத்தில் புகை வந்ததை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்து கீழ்த்தளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இரண்டாவது தளத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு கட்டிடத்தின் உரிமையாளர் சாந்தகுமாருக்கு சொந்தமான ஆவணங்கள் வைக்கப்பட்டு இருக்கும் அறையில், தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.



இதையடுத்து, வங்கி அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில், விரைந்து வந்த தாராபுரம் தீயணைப்புத்துறையினர், வங்கி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தை ஒரு மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் அணைத்தனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...