தினமலரில் காலை சிற்றுண்டி திட்டம் கேலி..! கோவையில் வலுக்கும் எதிர்ப்பு.. திமுக போராட்டம்

தமிழ்நாடு அரசின் காலை சிற்றுண்டி உணவுத் திட்டத்தை கேலி செய்யும் விதமாக செய்தி வெளியிட்ட தினமலரை எதிர்த்து கோவை திமுக இளைஞர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெளியான இந்த செய்தி தமிழ்நாட்டு இளைஞர்கள் மற்றும் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், தமிழ் பற்றாளர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: காலை உணவுத்திட்டத்தை கொச்சப்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழை திமுக இளைஞரணி மற்றும் மாணவரணியினர் எரித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தமிழ்நாடு அரசு மாணவர்கள் இடைநில்லா கல்வி பெற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் இந்தியா முழுவதும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வர பல மாணாக்கர்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக ஏற்கனவே வழங்கிய சத்துணவுடன் முட்டை வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஆரம்ப பள்ளிகளில் காலை சிற்றுண்டி உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு அந்தத் திட்டம் இந்தியா முழுவதும் வெற்றிகரமாக பேசப்பட்டது. தெலுங்கானா மாநில கல்வி அமைச்சர் இத்திட்டத்தை தமிழ்நாட்டில் வந்து எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து கருத்துக்களை கேட்டு அறிந்தார்.

இந்நிலையில், இன்றைய தினமலர் நாளிதழில் காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்தி முதல் பக்கம் தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளனர். இந்த செய்தி தமிழ்நாட்டு இளைஞர்கள் மற்றும் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், தமிழ் பற்றாளர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை கண்டித்து பல்வேறு இடங்களில் திமுகவின் இளைஞர் அணி மற்றும் மாணவர் அணியினர் தினமலரை எரித்து அவர்களுக்கு எதிராக கோஷங்கள் போட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.



கோவையில் தினமலர் நாளிதழை கண்டித்து டவுன்ஹால் மணிக்கூண்டில், திமுக மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தனபால் தலைமையில் திமுக இளைஞரணி மற்றும் மாணவரணியினர் தினமலர் நாளிதழை எரித்தும், கண்டன கோசங்களை எழுப்பியும் போராட்டம் நடத்தினர்.



இதில் இளைஞரணியை சேர்ந்த அருண், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மணிகண்டன், மசூத், அருண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



இந்தப் போராட்டம் சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது.



இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தனது எதிர்ப்புகளை தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...