இளம் குற்றவாளிகளை தடுக்க ஆபரேஷன் ரீபூட்…! ஒரு வருடத்தில் 173 குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு - காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நெகிழ்ச்சி..!!

கோவை மாநகர காவல்துறை சார்பில் ஆபரேஷன் ரீபூட் என்ற திட்டத்தின் மூலம் 173 இடைநிற்றல் பள்ளி மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுடன் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்துரையாடி நல்ல கருத்துகளை பதிவு செய்தார்.



கோவை: தொடர்ச்சியாக நடைபெற்ற 3 வழிப்பறி சம்பவங்களை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைத்துள்ளோம் எனவும் அவர்களை நெருங்கிவிட்டோம் எனவும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை மாநகர காவல்துறை சார்பில் ஆபரேஷன் ரீபூட் என்ற திட்டத்தின் மூலம் 173 இடைநிற்றல் பள்ளி மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சி மாநகர காவலர் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்வில் காவல் துறையினர், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் இத்திட்டம் குறித்து உரையாடினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்,



இளம் குற்றவாளிகளை தடுக்கும் வகையில் பள்ளி இடை நிற்றல் குழந்தைகளை ஆப்ரேசன் ரீபுட் என்ற திட்டம் மூலம் மீண்டும் படிக்க வைக்கும் திட்டம் அறிமுக செய்து வைக்கப்பட்டது.

போலீஸ் அக்கா திட்டத்தின் மூலம் பணியாற்றும் காவலர்கள், இடைநிற்றல் குழந்தைகளை கண்டறிந்து பேசியதாகவும், பின்னர் கோவை மாநகரில் 173 குழந்தைகளை பள்ளியில் மீண்டும் சேர்த்துள்ளதாகவும் கூறினார்.

20 குழந்தைகள் வெளி மாநிலத்தில் உள்ளதாகவும் இன்னும் 30 குழந்தைகளிடம் பேசி வருவதாகவும் தெரிவித்தார். இதற்கு உறுதுணையாக இருந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்து கொண்டார்.

பள்ளி குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்கு செல்ல வேண்டும் எனவுன் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இடை நிற்றல் குழந்தைகளை தொடர்ந்து கண்காணிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறினார். எதிர்கால வாய்ப்புகளை எடுத்துக்கூறி அவர்களை படிக்க வைக்க திட்டமிட்டுள்ளோம் எனவும் தெரிவித்தார். 3 மாதங்களுக்கு ஒருமுறை இடை நிற்றல் மாணவர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். கோவையில் தொடர்ச்சியாக நடைபெற்ற 3 வழிப்பறி சம்பவங்களை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைத்துள்ளோம் எனவும் அவர்களை நெருங்கிவிட்டோம் எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...