இளம் குற்றவாளிகளை தடுக்க ஆபரேஷன் ரீபூட்…! ஒரு வருடத்தில் 173 குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு - காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நெகிழ்ச்சி..!!

கோவை மாநகர காவல்துறை சார்பில் ஆபரேஷன் ரீபூட் என்ற திட்டத்தின் மூலம் 173 இடைநிற்றல் பள்ளி மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுடன் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்துரையாடி நல்ல கருத்துகளை பதிவு செய்தார்.



கோவை: தொடர்ச்சியாக நடைபெற்ற 3 வழிப்பறி சம்பவங்களை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைத்துள்ளோம் எனவும் அவர்களை நெருங்கிவிட்டோம் எனவும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை மாநகர காவல்துறை சார்பில் ஆபரேஷன் ரீபூட் என்ற திட்டத்தின் மூலம் 173 இடைநிற்றல் பள்ளி மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சி மாநகர காவலர் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்வில் காவல் துறையினர், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் இத்திட்டம் குறித்து உரையாடினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்,



இளம் குற்றவாளிகளை தடுக்கும் வகையில் பள்ளி இடை நிற்றல் குழந்தைகளை ஆப்ரேசன் ரீபுட் என்ற திட்டம் மூலம் மீண்டும் படிக்க வைக்கும் திட்டம் அறிமுக செய்து வைக்கப்பட்டது.

போலீஸ் அக்கா திட்டத்தின் மூலம் பணியாற்றும் காவலர்கள், இடைநிற்றல் குழந்தைகளை கண்டறிந்து பேசியதாகவும், பின்னர் கோவை மாநகரில் 173 குழந்தைகளை பள்ளியில் மீண்டும் சேர்த்துள்ளதாகவும் கூறினார்.

20 குழந்தைகள் வெளி மாநிலத்தில் உள்ளதாகவும் இன்னும் 30 குழந்தைகளிடம் பேசி வருவதாகவும் தெரிவித்தார். இதற்கு உறுதுணையாக இருந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்து கொண்டார்.

பள்ளி குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்கு செல்ல வேண்டும் எனவுன் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இடை நிற்றல் குழந்தைகளை தொடர்ந்து கண்காணிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறினார். எதிர்கால வாய்ப்புகளை எடுத்துக்கூறி அவர்களை படிக்க வைக்க திட்டமிட்டுள்ளோம் எனவும் தெரிவித்தார். 3 மாதங்களுக்கு ஒருமுறை இடை நிற்றல் மாணவர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். கோவையில் தொடர்ச்சியாக நடைபெற்ற 3 வழிப்பறி சம்பவங்களை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைத்துள்ளோம் எனவும் அவர்களை நெருங்கிவிட்டோம் எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...