குண்டடம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு - விலை வீழ்ச்சி, விவசாயிகள் கவலை

வறட்சி காரணமாக குண்டடம் சந்தைக்கு மாடுகளின் வரத்து அதிகமான காணப்பட்டது. 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான மாடுகள், இந்த வாரம் 40 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே விற்பனையானதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.


திருப்பூர்: கேரளாவில் ஓணம் பண்டிகை விமர்ரிசையாக கொண்டாடப்படுவதாலும், இறைச்சி தேவை அதிகம் இல்லாததாலும், கேரளா வியாபாரிகள் அதிகளவில் மாடுகளை வாங்காததால் மாடுகளின் விலை குறைந்துள்ளதாக வியபாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் மாட்டு சந்தைக்கு குண்டடம், காங்கயம், கோவை, உடுமலை, பல்லடம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

கேரளா, பொள்ளாச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கிச்செல்கின்றனர். தவிர விவசாயிகளும் வந்து வளர்ப்பு மாடுகளை வாங்கிச் செல்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை 7 முதல் 10 லிட்டர் வரை பால் கொடுக்கும் ஜெர்சி மாடு ரூ.60 ஆயிரம் வரை விலை போனது. ஆனால் தற்போது வறட்சி காரணமாக விலை குறையத்தொடங்கி இருப்பதால் கறவை மாடுகளின் விலையும் குறைந்து வருகிறது.

குண்டடம் மாட்டு சந்தையில் நேற்று 7 முதல் 10 லிட்டர் பால் கொடுக்கும் ஜெர்சி மாடு ரூ.40ஆயிரம் வரையே விலை போனது. அதே நேரத்தில் அடிமாட்டுக்கு போகும் கன்றுகளின் விலையில் பெரிய மாற்றமில்லை. 20 கிலோ உள்ள கன்றுகள் ரூ.3 ஆயிரம் வரை விலை போயின. நேற்று மட்டும் சந்தைக்கு சுமார் 2 ஆயிரம் மாடுகள் விற்பனைக்கு வந்தன. மாடுகள் மற்றும் கன்றுகளில் பெரும்பாலானவை விற்றுவிட்டன.

இதுபற்றி வியாபாரிகள் கூறுகையில், தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகை விமர்ரிசையாக கொண்டாடப்படுவதாலும், இறைச்சி தேவை அதிகம் இல்லாததாலும், கேரளா வியாபாரிகள் அதிகளவில் மாடுகளை வாங்காததால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...