மேல்முடி ரங்கநாதர் கோவிலுக்கு சென்ற இளைஞர் உயிரிழப்பு - சிறுத்தை தாக்கியிருக்கலாம் என தகவல்!

கோவை தடாகம் அருகேயுள்ள மேல்முடி ரங்கநாதர் கோவிலுக்கு சென்ற செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சுகசூரியா என்ற இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அவரது கைகள் மற்றும் கழுத்து பகுதியில் சிறுத்தை தாக்கிய தடம் இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தடாகம் அருகே மேல்முடி ரங்கநாதர் கோவிலுக்கு சென்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தடாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மேல்முடி ரங்கநாதர் கோவில் உள்ளது. இது ஒரு மலைக்கோவில் ஆகும். இங்கு சாலை வசதியோ படிக்கட்டுகளோ இல்லாததால், மலைப்பாதை வழியாக மட்டுமே ஏறி செல்ல முடியும்.

வழக்கமாக விசேஷ நாட்களில் அதிகமான பக்தர்கள் செல்வது வழக்கம். மற்றபடி இக்கோவிலுக்கு ஒரு சிலர் மட்டுமே சென்று வருவர்.

இந்நிலையில் நேற்று மாலை மேல்முடி தண்ணீர் பாறை பகுதியில் வன களப்பணியாளர்கள் ரோந்து பணி மேற்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் சடலத்தின் கை மற்றும் கழுத்துப் பகுதிகளில் சிறுத்தை தாக்கியது போல் காயங்கள் இருந்துள்ளது.

இதனை அடுத்து தடாகம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.



விசாரணையில் உயிரிழந்த நபர் கோவை பேரூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சுகசூர்யா (24) என்ற இளைஞர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் சுகசூரியா அடிக்கடி சிவன் கோவிலுக்கும் மலை கோவில்களுக்கும் தனியாகச் சென்று வருவார் என்றும் அவ்வாறு கோவில்களுக்குச் சென்றால் இரண்டு மூன்று நாட்கள் கழித்து தான் வருவார் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 15ம் தேதி கோவிலுக்கு சென்று விட்டு வருகிறேன் என்று கிளம்பிய சுகசூரியா வீடு திரும்பாத நிலையில் தற்போது சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இதே பகுதியில் காட்டு மாடு ஒன்றை சிறுத்தை தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....