சென்னை கோர்ட்டு தீர்ப்புக்கு வரவேற்பு - தாராபுரத்தில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக்கூட்டம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்று தாராபுரத்தில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.


திருப்பூர்: தாராபுரம் அண்ணா சிலை முன்பு நகர செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று அ.தி.மு.க.வினர் நேற்று மாலையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.



அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் இருந்து வந்தனர். கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அ.தி.மு.க. இரண்டு அணியாக பிரிந்து செயல்பட்டு வந்தது.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டப்பட்டு அதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ.பி.எஸ். உள்ளிட்ட 4 பேரை கட்சியிலிருந்து நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில்மனுதாக்கல் செய்தனர்.

அதில் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு கூட்டம் செல்லும். 4 பேரை நீக்கியது செல்லும் என தீர்ப்பளித்தது.



இதையொட்டி தாராபுரம் அண்ணா சிலை முன்பு நகர செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமையில் அ.தி.மு.க.வினர் நேற்று மாலையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

அப்போது மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் கவுரி சித்ரா முருகேசன், மாவட்ட கவுன்சிலர் பானுமதி கருணாகரன், நகர பொருளாளர் சாமுவேல், அம்மா பேரவை செயலாளர் கே.என். ராமசாமி, மாவட்ட பிரதிநிதி கோல்டன் ராஜ், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் அரசு குமாரன், மலை மாரிமுத்து, தினேஷ் குமார், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கே.ஆர்.சதீஷ், மின்சார பிரிவு அண்ணா தொழிற்சங்க தலைவர் பரணிகுமார், ஸ்டுடியோ கார்த்திக், லிட்டில் ராஜேந்திரன், வார்டு செயலாளர்கள் கணேசன், ராஜேஸ்வரி, செல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...