கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்றத் தலைவி அடாவடி பேச்சு - கிராம சபை கூட்டத்தில் இருந்து கிராம மக்கள் வெளிநடப்பு

கவுண்டச்சிபுதூர் கிராம ஊராட்சியின் கிராம சபை கூட்டம் அலங்கியம் சாலை திரு.வி.க நகர் விளையாட்டு பூங்கா மைதானத்தில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கிராம மக்களிடம் ஊராட்சி மன்றத் தலைவி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கிராம சபை கூட்டத்தில் இருந்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.


திருப்பூர்: தங்கள் கிராமப் பகுதியில் நீண்ட நாட்களாக தெரு விளக்கு எரியவில்லை. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கொண்டரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் புகார் தெரிவித்தனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் கவுண்டச்சிபுதூர் கிராம ஊராட்சியின் கிராம சபை கூட்டம் அலங்கியம் சாலை திரு.வி.க நகர் விளையாட்டு பூங்கா மைதானத்தில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தலைமையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஊராட்சி மன்ற தலைவர் வாசிக்க தொடங்கினார். அப்போது கொண்டரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் கிராமப் பகுதியில் நீண்ட நாட்களாக தெரு விளக்கு எரியவில்லை. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.

அதற்கு மறுப்பு தெரிவித்து பேசிய செல்வி, பொதுமக்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தெருவிளக்கு, குடிநீர், சாக்கடை வசதி, தார் சாலை வசதி, குப்பை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகள் குறித்து பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வியிடம் தெரிவித்தனர்.



ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் கிராம பொதுமக்களிடம் எதையும் செய்ய முடியாது நாங்கள் செய்து விட்டோம் என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...