கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்றத் தலைவி அடாவடி பேச்சு - கிராம சபை கூட்டத்தில் இருந்து கிராம மக்கள் வெளிநடப்பு

கவுண்டச்சிபுதூர் கிராம ஊராட்சியின் கிராம சபை கூட்டம் அலங்கியம் சாலை திரு.வி.க நகர் விளையாட்டு பூங்கா மைதானத்தில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கிராம மக்களிடம் ஊராட்சி மன்றத் தலைவி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கிராம சபை கூட்டத்தில் இருந்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.


திருப்பூர்: தங்கள் கிராமப் பகுதியில் நீண்ட நாட்களாக தெரு விளக்கு எரியவில்லை. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கொண்டரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் புகார் தெரிவித்தனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் கவுண்டச்சிபுதூர் கிராம ஊராட்சியின் கிராம சபை கூட்டம் அலங்கியம் சாலை திரு.வி.க நகர் விளையாட்டு பூங்கா மைதானத்தில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தலைமையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஊராட்சி மன்ற தலைவர் வாசிக்க தொடங்கினார். அப்போது கொண்டரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் கிராமப் பகுதியில் நீண்ட நாட்களாக தெரு விளக்கு எரியவில்லை. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.

அதற்கு மறுப்பு தெரிவித்து பேசிய செல்வி, பொதுமக்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தெருவிளக்கு, குடிநீர், சாக்கடை வசதி, தார் சாலை வசதி, குப்பை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகள் குறித்து பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வியிடம் தெரிவித்தனர்.



ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் கிராம பொதுமக்களிடம் எதையும் செய்ய முடியாது நாங்கள் செய்து விட்டோம் என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Newsletter

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...