கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்றத் தலைவி அடாவடி பேச்சு - கிராம சபை கூட்டத்தில் இருந்து கிராம மக்கள் வெளிநடப்பு

கவுண்டச்சிபுதூர் கிராம ஊராட்சியின் கிராம சபை கூட்டம் அலங்கியம் சாலை திரு.வி.க நகர் விளையாட்டு பூங்கா மைதானத்தில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கிராம மக்களிடம் ஊராட்சி மன்றத் தலைவி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கிராம சபை கூட்டத்தில் இருந்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.


திருப்பூர்: தங்கள் கிராமப் பகுதியில் நீண்ட நாட்களாக தெரு விளக்கு எரியவில்லை. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கொண்டரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் புகார் தெரிவித்தனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் கவுண்டச்சிபுதூர் கிராம ஊராட்சியின் கிராம சபை கூட்டம் அலங்கியம் சாலை திரு.வி.க நகர் விளையாட்டு பூங்கா மைதானத்தில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தலைமையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஊராட்சி மன்ற தலைவர் வாசிக்க தொடங்கினார். அப்போது கொண்டரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் கிராமப் பகுதியில் நீண்ட நாட்களாக தெரு விளக்கு எரியவில்லை. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.

அதற்கு மறுப்பு தெரிவித்து பேசிய செல்வி, பொதுமக்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தெருவிளக்கு, குடிநீர், சாக்கடை வசதி, தார் சாலை வசதி, குப்பை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகள் குறித்து பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வியிடம் தெரிவித்தனர்.



ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் கிராம பொதுமக்களிடம் எதையும் செய்ய முடியாது நாங்கள் செய்து விட்டோம் என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Newsletter

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...