கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்றத் தலைவி அடாவடி பேச்சு - கிராம சபை கூட்டத்தில் இருந்து கிராம மக்கள் வெளிநடப்பு

கவுண்டச்சிபுதூர் கிராம ஊராட்சியின் கிராம சபை கூட்டம் அலங்கியம் சாலை திரு.வி.க நகர் விளையாட்டு பூங்கா மைதானத்தில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கிராம மக்களிடம் ஊராட்சி மன்றத் தலைவி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கிராம சபை கூட்டத்தில் இருந்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.


திருப்பூர்: தங்கள் கிராமப் பகுதியில் நீண்ட நாட்களாக தெரு விளக்கு எரியவில்லை. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கொண்டரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் புகார் தெரிவித்தனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் கவுண்டச்சிபுதூர் கிராம ஊராட்சியின் கிராம சபை கூட்டம் அலங்கியம் சாலை திரு.வி.க நகர் விளையாட்டு பூங்கா மைதானத்தில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தலைமையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஊராட்சி மன்ற தலைவர் வாசிக்க தொடங்கினார். அப்போது கொண்டரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் கிராமப் பகுதியில் நீண்ட நாட்களாக தெரு விளக்கு எரியவில்லை. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.

அதற்கு மறுப்பு தெரிவித்து பேசிய செல்வி, பொதுமக்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தெருவிளக்கு, குடிநீர், சாக்கடை வசதி, தார் சாலை வசதி, குப்பை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகள் குறித்து பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வியிடம் தெரிவித்தனர்.



ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் கிராம பொதுமக்களிடம் எதையும் செய்ய முடியாது நாங்கள் செய்து விட்டோம் என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...