மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

கோவையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், பொள்ளாச்சி, கருமத்தம்பட்டி, மேட்டுப்பாளையம், சூலூர், பெரியநாயக்கன்பாளையம், சிறுமுகை, காரமடை, அன்னூர், ஆகிய பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் கழிவு நீர் கலப்பதா விவசாயிகள் புகார் மனு அளித்தனர்.


கோவை: கிராமப்புற சாலைகளில் வீட்டு கழிவுகள் கொட்டுவதால், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.



எனவே மாவட்ட நிர்வாகம் இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிசாமி அளித்த மனுவில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கருமத்தம்பட்டி, மேட்டுப்பாளையம், சூலூர், பெரியநாயக்கன்பாளையம், சிறுமுகை, காரமடை, அன்னூர், ஆகிய பகுதிகளை சார்ந்து இருக்கும் நீர் நிலைகளான குளம், குட்டை, ஏரி, பள்ளம், ஆறு ஆகிய பகுதிகளில் கழிவுநீர் கலந்து நீர் மாசடைந்து வருகிறது.

ஆகையால் நீர்நிலை சார்ந்த தொழிற்சாலை கழிவுநீர்களும், நகர்ப்புற மற்றும் கிராமப்புற கழிவுநீர்களும் சில இடங்களில் கலந்து நீரின் தன்மை கெட்டு நிலத்தடி நீர் மாசடைந்து விவசாயமும், பொதுமக்களும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் கிராமப்புற சாலைகளில் வீட்டு கழிவுகள் கொட்டி பொது சாலை விவசாயத்திற்கு இடையூறாக இருந்து வருவதாலும், சுற்றுச்சூழல் மாசுபட்டு மக்களுக்கு நோய்கள் பரவும் நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.



மேலும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஏராளமான விவசாயிகள் அவர்களது கோரிக்கை சம்பந்தமான மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...