பட்டப்பகலில் 2 இடங்களில் நகை,பணம் கொள்ளை - நடத்துனர்கள் வீடுகளில் கைவரிசையை காட்டிய கொள்ளையர்கள்

தாராபுரத்தில் இரு வேறு இடங்களில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வரும் இரண்டு நடத்துனர்கள் வீடுகளில் பணம் மற்றும் நகை கொள்ளை போனது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: முருகேசன் என்பவரது வீட்டிலும், பாலு என்பவரது வீட்டிலும் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட வேண்டும் என்று கேட்டுகொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சகுனிபாளையம் சாலை சபரி ஐயப்பன் நகர் பகுதியில் வசித்து வருபவர் முருகேசன் (56). தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவர் இரவு 7 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு மூலனூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இன்று காலை 11-மணி அளவில் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.



அப்போது, வந்து பார்த்த பொழுது வீட்டின் முன் பக்க கதவு உடைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது.



பீரோவில் இருந்த தங்கசங்கிலி, மோதிரம், வளையல் என மொத்தம் 8 சவரன் தங்க நகைகள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த முருகேசன் தாராபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதன்பேரில் தாராபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதேபோல் அலங்கியம் சாலை மெட்ரோ சிட்டியில் வசித்து வருபவர் பாலு (56). இவர் திருப்பூர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். பாலும் தனியாக வசித்து வருகிறார்.



இன்று மதியம் பாலு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு மேல் தளத்தில் இருந்த கதவும் உடைக்கப்பட்டிருந்தது.



உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு துணிகள் கலந்து கிடந்தது. பீரோவில் இருந்த 6- சவரன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்க பணம் திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பகல் நேரங்களில் மெட்ரோ சிட்டி சபரி அய்யப்பன் நகர் போன்ற பகுதியில் போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...