Startup TN தமிழ்நாடு புத்தொழில்‌ திருவிழா - கோவை கொடிசியா கண்காட்சி வளாகத்தில்‌ கோலாகலம்

"TANSEED" 5.0 திட்டத்தின்‌ கீழ்‌ தொழில் முனைவோர்களுக்கு ரூ.15 லட்சத்திற்கான தேர்வு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில், தமிழக குறு, சிறு மற்றும்‌ நடுத்தர தொழில்துறை அமைச்சர்‌ தி.மு.அன்பரசன்‌ மற்றும்‌ தமிழக தொழில்துறை அமைச்சர்‌ T.R.B ராஜா கலந்து கொண்டனர்.


கோவை: வெற்றி பெற்ற தொழில்‌ முனைவோர்கள்‌ "TANSEED" 5.0 திட்டத்தின்‌ நிதியை தங்களின்‌ தயாரிப்பு பொருட்களை மேம்படுத்துவதறகாக பயன்படுத்தி கொள்வர்‌ என தெரிவிக்கப்பட்டது.

Startup TN முன் முயற்சியான "TANSEED" 5.0 ஆரம்ப நிலையில்‌ உள்ள தொழில்‌ முனைவோருக்கான நிதியுதவி அளிக்கும்‌ திட்டமாகும்‌. இந்த திட்டத்தின்‌ நிதியானது பசுமை தொழில்நுட்பம், கிராமப்புற தாக்கம்‌ மற்றும்‌ பெண்கள்‌ தலைமையிலான தொழில்‌ முனைவோருக்கு ரூ.15 லட்சம்‌ வரை மானியம்‌ மற்றும்‌ 3% பங்கு வழங்குகின்றது.

மேலும்‌ பிற துறைகளில்‌ உள்ள தொழில்‌ முனைவோருக்கு ரூ.10 லட்சம்‌ வழங்குகின்றது. இப்புத்தொழில்‌ திருவிழாவை தமிழக முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌ காணொளி உரையுடன்‌ தொடங்கி வைத்தார்‌.

மேலும்‌ தமிழக குறு, சிறு மற்றும்‌ நடுத்தர தொழில்துறை அமைச்சர்‌ தி.மு.அன்பரசன்‌ மற்றும்‌ தமிழக தொழில்துறை அமைச்சர்‌ T.R.B ராஜா கலந்து கொண்டு தலைமை தாங்கினார்‌.

அமைச்சர்‌ தி.மு.அன்பரசன்‌ தொழில்‌ நுட்ப வணிக காப்பகத்தின்‌ தொழில்‌ முனைவோர்களான சுபத்ரா (நிறுவனர்‌ PVR Foods), ரிஃபானா சாகுல்(நிறுவனர் Myco Mushroom Hub), T.விக்னேஷ்வரன்‌ (நிறுவனர்‌, Nandha InfoTech) மற்றும் K.உதயகுமார்( நிறுவனர் Carpro Technologies) ஆகியோர்களுக்கு TANSIM -TANSEED 5.0 திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.15 லட்சத்திற்கான தேர்வு சான்றிதழ்களை வழங்கினார்‌.

இத்திட்டத்தின்‌ பயனாளிகள்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ வெ.கீதாலட்சுமி அவர்களிடம்‌ தங்கள்‌ புத்தொழில்‌ முயற்சிகள்‌ மற்றும்‌ யோசனைகள்‌ குறித்து 23.08.2023 அன்று கலந்துரையாடினர்‌. தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து கூறினார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தின்‌ இயக்குனர்‌ முனைவர்‌ ஏ.சோமசுந்தரம்‌ அவர்கள்‌ மற்றும்‌ தொழில்‌ நுட்ப வணிக காப்பக செயல்‌ இயக்குனர்‌ மற்றும்‌ தலைமை செயல்‌ அதிகாரி A.V.ஞானசம்பந்தம்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌. வெற்றி பெற்ற தொழில்‌ முனைவோர்கள்‌ இந்த திட்டத்தின்‌ நிதியை தங்களின்‌ தயாரிப்பு பொருட்களை மேம்படுத்துவதறகாக பயன்படுத்தி கொள்வர்‌ என தெரிவிக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...