Startup TN தமிழ்நாடு புத்தொழில்‌ திருவிழா - கோவை கொடிசியா கண்காட்சி வளாகத்தில்‌ கோலாகலம்

"TANSEED" 5.0 திட்டத்தின்‌ கீழ்‌ தொழில் முனைவோர்களுக்கு ரூ.15 லட்சத்திற்கான தேர்வு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில், தமிழக குறு, சிறு மற்றும்‌ நடுத்தர தொழில்துறை அமைச்சர்‌ தி.மு.அன்பரசன்‌ மற்றும்‌ தமிழக தொழில்துறை அமைச்சர்‌ T.R.B ராஜா கலந்து கொண்டனர்.


கோவை: வெற்றி பெற்ற தொழில்‌ முனைவோர்கள்‌ "TANSEED" 5.0 திட்டத்தின்‌ நிதியை தங்களின்‌ தயாரிப்பு பொருட்களை மேம்படுத்துவதறகாக பயன்படுத்தி கொள்வர்‌ என தெரிவிக்கப்பட்டது.

Startup TN முன் முயற்சியான "TANSEED" 5.0 ஆரம்ப நிலையில்‌ உள்ள தொழில்‌ முனைவோருக்கான நிதியுதவி அளிக்கும்‌ திட்டமாகும்‌. இந்த திட்டத்தின்‌ நிதியானது பசுமை தொழில்நுட்பம், கிராமப்புற தாக்கம்‌ மற்றும்‌ பெண்கள்‌ தலைமையிலான தொழில்‌ முனைவோருக்கு ரூ.15 லட்சம்‌ வரை மானியம்‌ மற்றும்‌ 3% பங்கு வழங்குகின்றது.

மேலும்‌ பிற துறைகளில்‌ உள்ள தொழில்‌ முனைவோருக்கு ரூ.10 லட்சம்‌ வழங்குகின்றது. இப்புத்தொழில்‌ திருவிழாவை தமிழக முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌ காணொளி உரையுடன்‌ தொடங்கி வைத்தார்‌.

மேலும்‌ தமிழக குறு, சிறு மற்றும்‌ நடுத்தர தொழில்துறை அமைச்சர்‌ தி.மு.அன்பரசன்‌ மற்றும்‌ தமிழக தொழில்துறை அமைச்சர்‌ T.R.B ராஜா கலந்து கொண்டு தலைமை தாங்கினார்‌.

அமைச்சர்‌ தி.மு.அன்பரசன்‌ தொழில்‌ நுட்ப வணிக காப்பகத்தின்‌ தொழில்‌ முனைவோர்களான சுபத்ரா (நிறுவனர்‌ PVR Foods), ரிஃபானா சாகுல்(நிறுவனர் Myco Mushroom Hub), T.விக்னேஷ்வரன்‌ (நிறுவனர்‌, Nandha InfoTech) மற்றும் K.உதயகுமார்( நிறுவனர் Carpro Technologies) ஆகியோர்களுக்கு TANSIM -TANSEED 5.0 திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.15 லட்சத்திற்கான தேர்வு சான்றிதழ்களை வழங்கினார்‌.

இத்திட்டத்தின்‌ பயனாளிகள்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ வெ.கீதாலட்சுமி அவர்களிடம்‌ தங்கள்‌ புத்தொழில்‌ முயற்சிகள்‌ மற்றும்‌ யோசனைகள்‌ குறித்து 23.08.2023 அன்று கலந்துரையாடினர்‌. தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து கூறினார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தின்‌ இயக்குனர்‌ முனைவர்‌ ஏ.சோமசுந்தரம்‌ அவர்கள்‌ மற்றும்‌ தொழில்‌ நுட்ப வணிக காப்பக செயல்‌ இயக்குனர்‌ மற்றும்‌ தலைமை செயல்‌ அதிகாரி A.V.ஞானசம்பந்தம்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌. வெற்றி பெற்ற தொழில்‌ முனைவோர்கள்‌ இந்த திட்டத்தின்‌ நிதியை தங்களின்‌ தயாரிப்பு பொருட்களை மேம்படுத்துவதறகாக பயன்படுத்தி கொள்வர்‌ என தெரிவிக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...