Startup TN தமிழ்நாடு புத்தொழில்‌ திருவிழா - கோவை கொடிசியா கண்காட்சி வளாகத்தில்‌ கோலாகலம்

"TANSEED" 5.0 திட்டத்தின்‌ கீழ்‌ தொழில் முனைவோர்களுக்கு ரூ.15 லட்சத்திற்கான தேர்வு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில், தமிழக குறு, சிறு மற்றும்‌ நடுத்தர தொழில்துறை அமைச்சர்‌ தி.மு.அன்பரசன்‌ மற்றும்‌ தமிழக தொழில்துறை அமைச்சர்‌ T.R.B ராஜா கலந்து கொண்டனர்.


கோவை: வெற்றி பெற்ற தொழில்‌ முனைவோர்கள்‌ "TANSEED" 5.0 திட்டத்தின்‌ நிதியை தங்களின்‌ தயாரிப்பு பொருட்களை மேம்படுத்துவதறகாக பயன்படுத்தி கொள்வர்‌ என தெரிவிக்கப்பட்டது.

Startup TN முன் முயற்சியான "TANSEED" 5.0 ஆரம்ப நிலையில்‌ உள்ள தொழில்‌ முனைவோருக்கான நிதியுதவி அளிக்கும்‌ திட்டமாகும்‌. இந்த திட்டத்தின்‌ நிதியானது பசுமை தொழில்நுட்பம், கிராமப்புற தாக்கம்‌ மற்றும்‌ பெண்கள்‌ தலைமையிலான தொழில்‌ முனைவோருக்கு ரூ.15 லட்சம்‌ வரை மானியம்‌ மற்றும்‌ 3% பங்கு வழங்குகின்றது.

மேலும்‌ பிற துறைகளில்‌ உள்ள தொழில்‌ முனைவோருக்கு ரூ.10 லட்சம்‌ வழங்குகின்றது. இப்புத்தொழில்‌ திருவிழாவை தமிழக முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌ காணொளி உரையுடன்‌ தொடங்கி வைத்தார்‌.

மேலும்‌ தமிழக குறு, சிறு மற்றும்‌ நடுத்தர தொழில்துறை அமைச்சர்‌ தி.மு.அன்பரசன்‌ மற்றும்‌ தமிழக தொழில்துறை அமைச்சர்‌ T.R.B ராஜா கலந்து கொண்டு தலைமை தாங்கினார்‌.

அமைச்சர்‌ தி.மு.அன்பரசன்‌ தொழில்‌ நுட்ப வணிக காப்பகத்தின்‌ தொழில்‌ முனைவோர்களான சுபத்ரா (நிறுவனர்‌ PVR Foods), ரிஃபானா சாகுல்(நிறுவனர் Myco Mushroom Hub), T.விக்னேஷ்வரன்‌ (நிறுவனர்‌, Nandha InfoTech) மற்றும் K.உதயகுமார்( நிறுவனர் Carpro Technologies) ஆகியோர்களுக்கு TANSIM -TANSEED 5.0 திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.15 லட்சத்திற்கான தேர்வு சான்றிதழ்களை வழங்கினார்‌.

இத்திட்டத்தின்‌ பயனாளிகள்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ வெ.கீதாலட்சுமி அவர்களிடம்‌ தங்கள்‌ புத்தொழில்‌ முயற்சிகள்‌ மற்றும்‌ யோசனைகள்‌ குறித்து 23.08.2023 அன்று கலந்துரையாடினர்‌. தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து கூறினார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தின்‌ இயக்குனர்‌ முனைவர்‌ ஏ.சோமசுந்தரம்‌ அவர்கள்‌ மற்றும்‌ தொழில்‌ நுட்ப வணிக காப்பக செயல்‌ இயக்குனர்‌ மற்றும்‌ தலைமை செயல்‌ அதிகாரி A.V.ஞானசம்பந்தம்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌. வெற்றி பெற்ற தொழில்‌ முனைவோர்கள்‌ இந்த திட்டத்தின்‌ நிதியை தங்களின்‌ தயாரிப்பு பொருட்களை மேம்படுத்துவதறகாக பயன்படுத்தி கொள்வர்‌ என தெரிவிக்கப்பட்டது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...