கோவையில் பாதாள சாக்கடை உள்ள வீடுகள் கணக்கெடுப்பு பணி - பொதுமக்கள் ஒத்துழைக்க மாநகராட்சி வேண்டுகோள்!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை உள்ள வீடுகளின் கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில், கணக்கெடுப்பு பணிக்கு வரும் அதிகாரிகளிடம் சொத்து வரி ரசீது, மின் கட்டண ரசீது, குடிநீர் இணைப்பு எண் மற்றும் பாதாள சாக்கடை வைப்புத் தொகை ரசீது உள்ளிட்டவற்றின் நகல்களை வழங்கி ஒத்துழைப்பு தருமாறு மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை உள்ள வீடுகளின் கணக்கெடுப்பு நடைபெற உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட தங்கள்‌ பகுதியில்‌ பாதாள சாக்கடை இணைப்பு பெற்ற வீடுகளை பற்றிய கணக்கெடுப்பு நடைபெற்று கொண்டு இருக்கிறது.

இது தொடா்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தங்கள்‌ வீட்டிற்கு மாநகராட்சி ஊழியா்கள்‌ கணக்கெடுக்கும் பணிக்கு வரும்போது கீழ்கண்ட ஆவணங்களை நகல்‌ எடுத்து (ஜெராக்ஸ்‌) கணக்கெடுப்பிற்கு வரும்‌ மாநகராட்சி ஊழியர்களிடம்‌ கொடுத்து ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

1. சொத்துவரி இரசீது எண்‌ தெரிந்து கொள்ள இரசீது நகல்‌ (xerox copy of Property Tax).

2. மின்சார கட்டண இரசீது (Xerox Copy of Latest Electricity Bill) நகல்.

3. குடிநீர் இணைப்பு எண்‌ தெரிந்து கொள்ள இரசீது நகல்‌.

4. பாதாள சாக்கடை தொடர்பான வைப்புத்தொகை ஏற்கனவே செலுத்தி இருந்தால்‌ அதற்கான புகைப்பட நகல்‌.

01.08.2023 முதல்‌ திருத்தியமைக்கப்பட பாதாள சாக்கடை திட்ட இணைப்புகளுக்கான கட்டண விபரம்‌ பின்வருமாறு,

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...