கோவைக்கு வரும் ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் அறிவிப்பு!

வரும் ஆகஸ்டு 24ஆம் தேதி பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்வுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக முற்போக்கு அமைப்புகளின் சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடத்த உள்ளதாக தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவைக்கு வருகை தருகை ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட போவதாக தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, காந்திபுரம், பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கு.ராமகிருட்டிணன், பேசியதாவது,



தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசால் ஒருமனதாக தீர்மானிக்கப்படுகின்ற நீட் தேர்விற்கு எதிரான மசோதாக்கள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான மசோதாக்கள் இவற்றையெல்லாம் அனுமதிக்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போடுவதோடு மட்டுமல்லாமல் இவற்றையெல்லாம் நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று வெளிப்படையாகவும் தமிழ்நாட்டு மக்களுக்கே எதிராகவும் பேச துவங்கியுள்ளார்.

தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் எந்த மசோதாக்களுக்கும் அவர் அனுமதி வழங்குவதில்லை. தற்பொழுது தமிழ்நாடு அரசின் கல்விக் கொள்கையில் மாநில அரசு வகுத்திருக்கக்கூடிய கல்வித் திட்டத்தை பல்கலைக்கழகங்கள் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என வெளிப்படையாக பல்கலைக் கழகங்களுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசு தமிழ்நாடு கல்விக் கொள்கையை கூட வகுக்க முடியாத நிலைக்கு ஆளுநர் தள்ளுகிறார். அதேபோல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு குழுவிற்கு யாரை தலைவராக நியமிக்க வேண்டும் என்பதையும் தமிழ்நாடு அரசு முடிவு எடுக்க முடியாது என்ற நிலையில் தமிழக மக்களையும் தமிழ்நாட்டையும் ஆளுநர் வஞ்சித்துக் கொண்டு இருக்கிறார். தமிழ்நாட்டின் வளர்ச்சியில் ஆளுநர் தடையாக இருக்கிறார்.



இந்நிலையில் வருகின்ற 24-ஆம் தேதி கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக பட்டம் அளிப்பு விழாவிற்கு ஆளுநர் வருகை புரிவாரானால் லாலி ரோடு பகுதியில் கருப்புக் கொடி போராட்டத்தை நடத்துவோம்.

தமிழ்நாடு திராவிட இயக்கங்களால் அடைந்துள்ள வளர்ச்சியை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாமல் அதனை தடை செய்ய வேண்டும் என்ற திட்டத்தோடு ஆளுநர் இயங்கிக் கொண்டிருக்கிறார். ஆளுநர் பாஜகவின் செய்தி தொடர்பாளர் போலவும் மாநில தலைவர் போலவும் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

பாஜகவின் திட்டங்களையும் நோக்கங்களையும் தமிழ்நாட்டில் நிறைவேற்றுவதும் பாஜகவை இங்கு வளர்ப்பதற்காகவும் தான் மக்கள் பணத்தில் உருவாகிய ராஜ் பவனில் அமர்ந்து கொண்டு பாஜகவில் ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். நீட் மசோதா தற்பொழுது ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டுள்ளது.

அது பற்றிய கருத்தை ஜனாதிபதி தான் தெரிவிக்க முடியும், அதைப் பற்றி தமிழக ஆளுநர் பேச முடியாது. வேண்டுமானால் பாஜகவினர் மேடையில் ஆளுநர் அவரது கருத்துக்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை ரேஸ்கோர்ஸில் மக்களுடன் நடைபயணம்: வாக்காளர்களின் குறைகளை கேட்டறிந்த AIADMK வேட்பாளர் அர்ஜுனன்

தீவிர தேர்தல் பணிகளுக்கு மத்தியில் AIADMK வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயணம் மேற்கொண்டு மக்...

“தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு” – கருப்புக்கொடி ஏற்றிய செந்தில் பாலாஜி..!

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி ஏற்றி திமுகவினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கரூரி...

தொண்டாமுத்தூர் தொகுதி அலுவலகத்தில் Delimitation எதிர்ப்பு: திமுக கருப்புக்கொடி போராட்டம்

கோயம்புத்தூர் தொண்டாமுத்தூரில் மத்திய பாஜக அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகிகள்...

சிங்காநல்லூரில் ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.10.18 கோடி தங்கம், வைர நகைகள் பறிமுதல்

சிங்காநல்லூர் தொகுதியில் உள்ள கொடிசியா பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஏப்ரல் 15ம் தேதி வேனில் ஆவணமின்றி கொண்ட...

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் தேர்தல் பயிற்சி வகுப்பு ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026க்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Pra...

தொகுதி மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடி போராட்டம்

Coimbatore மாவட்டத்தில் ஒன்றிய அரசின் தொகுதி மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்கள் வீட...