திருப்பூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு - பொக்கலைன் இயந்திரத்துடன் சென்ற மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்

திருப்பூரில் ஆக்கிரமிட்பு பகுதியில் இருந்து காலி செய்ய வேண்டும் என்று ஆக்கிரமிட்பு வீடுகளை இடிப்பதற்காக பொக்லைன் எந்திரத்துடன் மாநகராட்சி அதிகாரிகள் சென்றனர். அப்போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.



திருப்பூர்: குழந்தைகளின் பள்ளி படிப்பு முடியும் வரை தங்களை அணைப்பாளையம் பகுதியில் இருந்து வெளியேற்றக்கூடாது என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறினர். இதனையடுத்து காலி செய்த வீடுகளை மட்டும் இடித்து அவர்கள் சென்றனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கல்லூரி சாலை, அணைப்பாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தை ஒட்டிய புறம்போக்கு நிலத்தில் பொதுமக்கள் சிலர் 30 வருடங்களுக்கு மேலாக வீடுகளை கட்டி குடியிருந்து வந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் ஆக்கிரமித்த வீடுகளை காலி செய்ய வேண்டும் எனவும், காலி செய்பவர்களுக்கு நெருப்பெரிச்சல் பகுதியில் வீடுகள் வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இது தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு நெருப்பெரிச்சல் பகுதியில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமித்த வீடுகளை இடிப்பதற்காக பொக்லைன் இயந்திரத்துடன் அணைப்பாளையம் பகுதிக்கு சென்றனர்.



அப்போது அங்கு குடியிருந்த பொதுமக்கள் வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களுக்கு இன்னும் நெருப்பெரிச்சல் பகுதியில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனவும் அவ்வாறு இருக்கும் நிலையில் தாங்கள் எங்கு போய் தங்க முடியும், அதுமட்டுமின்றி எங்களது குழந்தைகள் இங்கே அருகில் உள்ள பள்ளியில் கல்வி பயின்று வருகிறார்கள். தற்பொழுது நெருப்பெரிச்சல் பகுதியில் வீடு ஒதுக்கீடு செய்தால் அங்கிருந்து பள்ளிக்கு எவ்வாறு வர முடியும், எனவே எங்களுக்கு இதே பகுதியில் வீடுகள் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் அல்லது எங்களது குழந்தைகளின் பள்ளி படிப்பு முடியும் வரை இங்கேயே தங்க மாநகராட்சி அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.



இதையடுத்து மாநகராட்சி நிர்வாகிகள் காலி செய்த வீடுகளை மட்டும் இடித்துவிட்டு சென்றனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...